அன்றாடம்
பனிக்கட்டிக் கண்காட்சி (ICE CASTLES)
வீட்டின் முன்புறத்தில் செலுத்து வழியில் படிந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுபவர்களுக்கு பனிக்காலம் ஒரு பெரிய தண்டனைக் காலமாகவே படும். எப்போது இந்தப் பனிப்பொழிவு நிற்கும் எனக் காத்திருப்பார்கள். ஆனால் பிரெண்ட் கிரிஸ்டென்ஸனுக்கு (Brent Christensen) பனிப்பொழிவு ஒரு வரப்பிரசாதமாகப் படுகின்றது. ‘சிலை என்றால் அது சிலை; வெறும் கல்லென்றால் அது கல் தான்’ எனும் வழக்குக்கு ஏற்றாற் போல், நமக்கெல்லாம் சுமையாகத் தோன்றும் பனிக்குவியல் பிரெண்டுக்கு பணக் குவியலாகக் காட்சியளித்துள்ளது. பொதுவாக பனிக்காலம் என்பது மந்தமான, சோம்பலூட்டும் காலம். […]
சூப்பர் போல்
நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான […]
இருமலைப் போக்க எவ்வளவு காலம்?
நாம் நுண்ணுயிர் எதிர் மருந்துக்களை (Anti Biotics) பாக்டீரியாக் கிருமிகளுக்காக உட்கொள்ளினும், பெரும்பாலான நோயாளிகள் வைரஸ் கிருமிகளினால் தொற்றுவியாதிக்கும் இதை உட்கொள்வார்கள். இந்த மருந்து வகைகளை உட்கொள்ளும் அரைவாசியிலும் மேற்பட்டோருக்கு இருமலும், செருமலும் வருவது நெஞ்சின் சுவாசப் பிராணப்பாதையில் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் தடுமன், சளி போன்ற தொற்று நோய்களினால் ஆகும். ஆயினும் இவற்றில் பத்து சதவீதமானவர்களே பாக்டீரியாக் கிருமியின் தாக்கத்திற்கு ஆளானவர்கள். எனினும் ஏன் தான் நோயாளிகள் நுண்ணுயிர் எதிரி மாத்திரைகளை எடுத்தவாறு உள்ளனர் என்பது […]
ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்
’லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற “கண்ணே கண்மணியே” என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவே. இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, திரைப்பாடல்கள் இயற்றிய அனுபவம் இல்லையென்றாலும், தாலாட்டுப் பாட்டுக்கு, அனுபவமோ, இசையறிவோ தேவையில்லை எனக் […]






