\n"; } ?>
Top Ad
banner ad

Tag: book

இயந்திரத் தயாரிப்பா, கைவினையா?

இயந்திரத் தயாரிப்பா, கைவினையா?

அண்மையில் எழுத்தாளர்களின் அமைப்பான ‘ஆசிரியர்கள் சங்கம்’ (The Authors Guild), மனிதனால் எழுதப்பட்ட படைப்புகளை AI-உருவாக்கப்பட்டவற்றிலிருந்து வேறுபடுத்துவதற்காக “மனித எழுத்தாளர்” சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கியது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி மேரி ரேசன்பெர்கர், குறைந்த தரம் வாய்ந்த AI புத்தகங்களால் நிரம்பிய ஆன்லைன் சந்தைகளை வெல்ல, உண்மையான எழுத்தாளர்களுக்கு இந்த லேபிள் தேவை என்று பரிந்துரைத்தார். ‘கைவினைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டது’ என்பது உயர்ந்த தரத்தைக் குறிக்கிறதா? ‘கற்றலின் மொழி’ எனும் நூலின் விளம்பரத்தைக் கவனித்த ஒருவர், அந்த நூல் […]

Continue Reading »

மனம் நாடும் மனித போக்குகள்

மனம் நாடும் மனித போக்குகள்

  முன்னேற்றம் என்பது செய்பவை யாவற்றையும் துரிதமாக செய்தல்; இதற்கு இலத்திரனியல் Digital தொழில் நுட்பங்களை உபயோகித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. இவ்வகை நுட்பம் தெரியாவிட்டால், நாம் பின்தங்கி விட்டதாகவும் ஒரு சிந்தனை எம்மிடையே காணப்படுகிறது. நாம் மனிதர்; எமது சுபாவம், குணாதிசயம் இரண்டும் இணைந்து சமூகவியல் வாழ்வை அமைத்துக் கொள்வதே எங்கள் நோக்கம். அண்மைக்காலத்தில் எதையும் திறமையாக, துரிதமாக, இலத்திரனியல் மென்பொருளூடு செய்து முடித்து விடவேண்டும் என்ற உந்தல் இருந்து கொண்டே இருக்கிறது, இருந்தாலும் மனம் […]

Continue Reading »

எறிகணை புத்தக அறிமுக விழா

எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad