"ஏன்டீ...நாசமாப்போனவளே...இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது...தண்ணி இல்லாம நான் சாவனும்....அதானே உன் நெனப்பு...சீக்கிரமா தண்ணி கொண்டா டீ" என்று கத்திக் கொண்டிருந்தாள்....ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்...ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே...இப்படி எல்லாம் இல்லை...மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட...ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்...தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்...மாமனாரின் இறப்பும்...மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்... சேர்ந்து கொண்டதால் ....தன் வெறுப்புகளையும்...வருத்தங்களையும்..ரேவதியின் […]