admin
admin's Latest Posts
இந்தோனேசியாவில் ஹிந்து மதம்
நான்கு பக்கமும் கடலினால் சூழ்ந்த ஒரு தீவு. உலகில், இஸ்லாமியர்களின் மக்கட்தொகையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு. சமீபத்தில் சுற்றுலாவாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் சுவையான சில மதம் குறித்த கவனிப்புகளை ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலாவதாகவும், அரிதானதாகவும் நமது கண்களுக்குப் புலப்பட்ட காட்சி இங்கு வாழும் மக்களின் மதம் மற்றும் ஆன்மிகம் குறித்த நம்பிக்கை. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் எண்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும், நாம் சென்ற […]
எது பிரதானம்?
எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!
சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?
சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?
தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?
ஆட்டிஸம் – பகுதி 8
(ஆட்டிஸம் – பகுதி 7) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற […]
கபாலி திரைப்படத் திறனாய்வு
ஜுலை 21, 2016 – புலி வருது புலி வருது கதை போல ஏமாற்றாமல் ஒரு வழியாக மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் படம் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாள். அப்படி ஒரு நாளில் தான் அடியேனுக்கும் மினசோட்டா (MINNESOTA) மாநிலத்தில் ரோஸ்மௌன்ட் (ROSEMOUNT) நகரத்தில் உள்ள கார்மைக் (Carmike) திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. படம் பார்த்ததோடு […]
கபாலி கபளீகரம் – திரையிலும், திரைக்கு அப்பாலும்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது? தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் […]
காதல் கொண்டேனடி !
நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று
நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்
செம்புலப் பெயல் நீர்…….
“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]
Pujya Guruji – Karma Yoga explained
Chinmaya Mission is founded by devotees of Pujya Gurudev Swami Chinmayananda. All of us, the devotees, are celebrating May 8, 2015 till Aug 3, 2016 as his centennial birthday celebration year. We were blessed with visit by the head of Chinmaya Mission worldwide, Swami Tejomayanandaji, who is called Pujya Guruji. Guruji visited us from July […]
லெக்ஸி
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது. லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]







