admin
admin's Latest Posts
மேய்ப்பனை இழந்த மந்தைகள்
காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.
முருங்கைக்காய்க் கறி
நாட்டுப் புறமாயிருந்தால் என்ன, நகரப் புறமாயிருந்தால் என்ன முருங்கையின் மகிமையைத் தமிழர் அகத்திய குணப் பாடம் தொட்டு தற்காலம் வரை போற்றி மகிழுவர். தற்காலத்தில் உணவகங்களில் சாம்பாரில் மிதக்கும் ஒரு துண்டு காய்கறியாகக் காணப்படினும் அது முருங்கையின் தனிப்பட்ட சுவையை, மகிமையை ஒருபோதும் தரமாட்டாது. “செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் – மறமே நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே நல்ல முருங்கையிலையை மொழி” – என்கிறது அகத்தியர் குணபாடம் தமிழகத்திலும் ஈழத்திலும் சுண்ணாம்புக் கற்பாறை […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1
தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், […]
தமிழனென்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!!
”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி..” – தமிழ் மொழி ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி..” – தமிழ்க் குடி.. காலங்கலாமாய் பலரும் மேடையேறி முழங்கும் வசனம் இது. கல் மற்றும் மண் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் மொழியாம். உருவகமாய்க் கூறப்பட்ட இதன் அர்த்தம், தமிழ் மொழியும், தமிழ் இனமும் மிகவும் பழமையானது என்பதே. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 11
அத்தியாயம் 10 செல்ல இங்கே சொடுக்கவும் போன அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது நான் தாய்லாந்தில் பேசப்படும் “தாய்” மொழி பற்றி பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு எனக்கு தூக்கமே வரலை. தாய்லாந்து என்ற வார்த்தையில ஒரு பாதியான ”தாய்” நல்ல தமிழ்ல இருப்பதாகவும் மற்றொரு பாதி லாந்து(land) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாகவும் பட்டது. எனக்கு அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று மட்டும் பட்டது. இதுவும் […]
புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?
நிக்கொட்டீன் (Nicotine) போதைப்பொருளானது புகைத்தலின் போது உட்கொள்ளப்படும் போதைப்பொருளாகும். இது மன அழுத்தம், உளைச்சலை உண்டு பண்ணும் உடல் உட்சுரப்பிகளில் (Hormones) உடன் கலந்து மூளையின் இரசாயன அமைப்பை மாற்றி மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறது. தலைப்புச் செய்தி – புகைப்பிடித்தல் மதுபானத்தையும் அருந்தத்தூண்டும் என்று உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். நவீன மயமான இருப்பத்தியோராம் நூற்றாண்டில் மனித வர்க்கம் புதுமை பலவற்றைச் சாதிப்பினும் சுகாதார ரீதியில் பார்க்கும் போது பழமையான சில கடைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடவும் தொடர்ந்தும் பாடுபடுகிறது எனலாம். […]
பிள்ளைக் கனி அமுதே
பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?” “சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?” “ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.” “சின்னப் […]
பாமா ராஜன்
சங்கமம் 2014 தெருக்கூத்தின் உடை வடிவமைப்பாளர் மினசோட்டாத் தமிழ் சங்கம் நடத்திய சங்கம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில மூவேந்தர் கலைக்குழாம் நடத்திய தெருக்கூத்து நிகழ்சியின் உடை வடிவமைப்பாளர் திருமதி பாமா ராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டிக் கண்டோம். அவர் வடிவமைத்திருந்த ஆடைகள் அந்த நிகழ்ச்சியின் தரத்தை ஒருபடி அதிகரித்துக் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு நம் பாரம்பரியம் மாறாமல் வடிவமைத்திருந்த விதம் மிக அருமை. கேள்வி […]
தொலைத்து விட்ட நாட்கள்
ஆடித்திரிந்த வண்ணத்துப் பூச்சி
அழகாய் விரித்த இறகினில்
அடையாய்ப் பொழிந்த மழையிலும்
அழியா திருந்த ஓவியத்தில்
அகலா திருந்த மனம் ….
ஒரு சகாப்தத்தின் முடிவு (கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு பார்வை)
ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவை கருதி ஒருவன் உருவாகுகிறான். தனது உறவுகள், சூழல் என்பவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒரு புதிய பாதையில் பயணிக்கின்றான்.அப்படி உருவான ஒரு அற்புதக் கலைஞன்தான் கே .எஸ் .பாலச்சந்திரன் என்ற சமூகப் போராளி .1950 க்கு பின் ஆங்கிலப் புலமை பெற்ற ஒரு தலைமுறை உரிமை வேண்டி தமிழர்களுக்கும் தமிழுக்குமாகப் போராடியது . தங்களின் அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்னொரு கூட்டம் மக்களைப் படாதபாடு படுத்தியது .மக்களோடு நேரடியாகத் […]







