\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

கடினமான செய்திகளைப் பரிமாறுவது எப்படி?

Filed in கட்டுரை by on September 8, 2022 0 Comments
கடினமான செய்திகளைப் பரிமாறுவது எப்படி?

எமது வாழ்வில் அலுவல் காரணங்களிலும், பிற சந்தர்ப்பங்களிலும் நாம் கடினமான செய்திகளைப் பரிமாற வேண்டி வரலாம். இதை ஒரு வகையில் எடுத்துப் பார்த்தால, இது நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், நெறிமுறை நிறுவனங்களை வளர்ப்பதற்கும், நேர்மையான உறவுகளை உருவாக்குவதற்கும் முக்கியமானதொன்றாகும். அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஒரு ஆய்வின் முடிவும் இக்கருத்தை எதிரொலிக்கிறது. அசௌகரிய செய்திகளை எடுத்துச் செல்பவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும், குறைவான திறமைசாலிகளாகவும் அல்லது எதிர்மறையான நிகழ்வு நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருதப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது […]

Continue Reading »

வேர்களை வெறுக்காதீர்!

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2022 1 Comment
வேர்களை வெறுக்காதீர்!

  காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய்  உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான  உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள்.   அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது.   எடுத்தாள்.   […]

Continue Reading »

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]

Continue Reading »

பண்ணை வீடு

பண்ணை வீடு

நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]

Continue Reading »

கலாட்டா 17

கலாட்டா 17

Continue Reading »

இதமான வாழ்விற்கு இயற்கையே முன்வழி

இதமான வாழ்விற்கு இயற்கையே முன்வழி

இயற்கையில் நேரத்தைச் செலவழிப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட உதவும். எனவே வீடு, வேலைத்தலத்தில் இருந்து வெளியேறி, சுற்றாடலில் சஞ்சரிப்பது சுகமான உடலிற்கும் , மனதிற்கும் சாதகமான விடயம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மனிதகுலம் இயற்கையுடனான தொடர்பை இழந்து வருவதாக இயற்கையிலாளர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது அமெரிக்கா இயந்திரமாக்கலில் முன்னோக்கிச் செயற்பட்டு வந்தது. அந்தச் சமயத்தில் பொது மக்கள்  இதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. இன்று நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையுடனான எமது தொடர்பு மோசமாக […]

Continue Reading »

மினசோட்டா மீன் தேடல்

மினசோட்டா மீன் தேடல்

தூத்துக்குடி போகும்போதெல்லாம் காலையில் எழுந்து துறைமுகம் பக்கமிருக்கும் கடற்கரைக்குச் செல்லும் வழக்கமுண்டு. அச்சமயத்தில் அங்குக் கடலுக்குள் சென்றிருக்கும் சிறு சிறு படகுகள் கரை திரும்பி வரும் நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைக்கும். படகுகள் சிறியதாக இருந்தாலும், அவற்றில் நிறைய மீன்கள் பிடிக்கப்பட்டுக் கரைக்கு வந்து சேரும். கடற்கரையில் அந்த மீன்கள் மற்றும் இதர பிடிபட்ட கடழ்வாழ் உயிரினங்கள் கொட்டப்பட்டு, வகைவாரியாகப் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படும். நடைபயிற்சிக்கு வந்தவர்கள், வீட்டிற்கு மீன் வாங்க வந்தவர்கள், கூடையில் போட்டு வீதி […]

Continue Reading »

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN […]

Continue Reading »

பதியம் போட்ட உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on June 19, 2022 0 Comments
பதியம் போட்ட உறவுகள்

(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) “கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன். அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள். சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன […]

Continue Reading »

குடும்பத்தலைவி

குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள்  விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில்  கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad