\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

இனவாதமே பிணமாகு

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
இனவாதமே பிணமாகு

கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான்  – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே!    எமனின்  மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை  இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]

Continue Reading »

நட்புக்கான நந்நாள்

நட்புக்கான நந்நாள்

பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார்  அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]

Continue Reading »

பள்ளிக்கூட வழித்தடம்

பள்ளிக்கூட வழித்தடம்

ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு…   ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!! குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும்.   காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும்   ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும்! கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]

Continue Reading »

ஆசை…

ஆசை…

வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்! எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை!   நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!!   கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட   ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]

Continue Reading »

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்! ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்! இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்! ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்! உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்! ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்! ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்! […]

Continue Reading »

முடிவில்லாப் பயணம்!!

முடிவில்லாப் பயணம்!!

மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி  இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…!   கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில்  கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …!   மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன்  மனதாலே ..!   இன்னிசை மழையில் நனைந்து […]

Continue Reading »

எனைப் பெத்தவளே …!!

எனைப் பெத்தவளே …!!

இருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும்  கிடைக்குமோ ..!   கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே  குலசாமியா காத்தவளே ..!   அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..!   உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..!   எனைப் பெத்தவளே ..!! நீ ஆண்டு நூறு வாழவேணும் …!! எனைப் பெத்த மகராசி ..!! […]

Continue Reading »

காதல்

காதல்

அந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன்  வரவிற்காக  ஏங்குகிறது …!   சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..!   காதலில்  இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில்  சாய்ந்திடத் துடிக்கிறது …!   மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]

Continue Reading »

வித்தகன் பாலகுமாரன்!

வித்தகன் பாலகுமாரன்!

என்னெழுத்தின் வித்தவன் எழுதுவதில் வித்தகன் எத்துறையிலும் வித்துவான் எத்தலைப்பையும் விளக்குவான்! மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன்!! இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க!! -மதுசூதனன் (Picture Courtesy: https://www.writerbalakumaran.com)

Continue Reading »

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?

சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad