\n"; } ?>
Top Ad
banner ad

கதை

தலைக்கு மேல வேல….

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 3

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 3

(பாகம் 2) பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அஞ்ஞானத்தின் வடிவாகத் திகழ்ந்த அரக்கன் அபஸ்மரா. அஞ்ஞானத்தினால் பல தீமைகள் செய்தான். அவனை அழிக்கச் சிவபெருமான் நடராஜராக அவதரித்தார். அவர் அபஸ்மராவை வீழ்த்தி அவன் மேல் நடனம் புரிந்தார். இந்த நடனத்தை ஆனந்ததாண்டவம் என்பார்கள். அறியாமை எனும் திரை அகன்றால் நம்முள் உள்ள ஆனந்தம் தானாகக் காணப்படும். அபஸ்மரா இறக்கும் நேரம் வந்துவிட்டது. எமதர்மராஜன் காளை மேல் அமர்ந்து அங்கே வந்தார். அபஸ்மரா ஆத்மாவைக்  கொண்டு செல்ல தனது […]

Continue Reading »

தப்புத் தாளங்கள்

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
தப்புத் தாளங்கள்

”அம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”….  சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள். “நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… […]

Continue Reading »

வினா வினா ஒரே வினா

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
வினா வினா ஒரே வினா

இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]

Continue Reading »

நிலவும் வசப்படும்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
நிலவும் வசப்படும்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ! ……. ……… அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…? உனது புன்னகை போதுமடி ! ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு […]

Continue Reading »

எனக்கு ஒரு மகன் பிறந்தான்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
எனக்கு ஒரு மகன் பிறந்தான்

நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 2

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 2

(பாகம் 1) அமலா கண் இமைப்பதைக் கூட மறந்து, நீலவேணி சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். நீலவேணி சொல்லியதாவது: “முப்பது வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதைக் கண்ட மக்கள் சிலர் அவரைத் துரத்தினர். அவரும் சிதம்பரநாதர் சந்நிதியில் ஒளிந்து கொண்டார். மக்கள் தேடிக் களைத்துச் சென்ற பின்னர், இருட்டில் எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியாமல் சிதம்பர ரகசியம் என்று போற்றப்படும் குகைக்குள் நுழைந்தார். அங்கு மின்னிக் கொண்டிருந்த […]

Continue Reading »

யாரடியோ?

யாரடியோ?

கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !

வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!

Continue Reading »

பக்குவக் காதல்

பக்குவக் காதல்

சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 1

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 1

“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad