\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

சுறா மீன் கறி

Filed in அன்றாடம், சமையல் by on March 28, 2016 0 Comments
சுறா மீன் கறி

மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம். ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் […]

Continue Reading »

திருவிவிலியக் கதைகள்: அழிவையல்ல….  மனமாற்றத்தையே…..!

திருவிவிலியக்  கதைகள்: அழிவையல்ல….  மனமாற்றத்தையே…..!

(திருவிவிலியக்  கதைகள்) கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை,  எல்லையும் இல்லை.  கனிவு காட்டுவதில் நல்லார்  பொல்லாதவர் என்று அவர் வேறுபாடு பார்ப்பதில்லை. அவரது அறிவுறுத்தும் வார்த்தையைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்புத் தருகிறார்.  அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார். முன்பொரு காலத்தில் அதாவது  கி.மு. 600 ஆம் ஆண்டுக்கு முன்பு  ஆஸ்ரியா  என்ற ஒரு பேரரசு இருந்தது. அதனுடைய தலைநகரம் நினிவே என்ற அழகான […]

Continue Reading »

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். இது, கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரான செயிண்ட் பால் நகரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  இந்த வருடம்  50 வது முறையாக கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது பழைய தொகுப்பு  https://www.panippookkal.com/ithazh/archives/4229 சொடுக்கவும்.

Continue Reading »

கலக்கப்போவது நாங்கதான்

Filed in அன்றாடம், பேட்டி by on March 17, 2016 0 Comments
கலக்கப்போவது நாங்கதான்

ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல்.   கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே? நீங்க கொடுக்கிற  மருந்து எப்படி இருக்கும்? பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல […]

Continue Reading »

சாவுக்கு சாவும் நம் உயிருக்கு உயிர்ப்பும்

சாவுக்கு சாவும் நம் உயிருக்கு உயிர்ப்பும்

உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்போம் என்பது இயற்கையின் கட்டாயம். இதில் ஏழை என்றோ பணக்காரன் என்றோ பகுப்பாடு கிடையாது. ஆனால் கிடைத்த வாழ்வில் சாவைவென்று உயிருள்ள வாழ்கையை எப்படி வாழ்வது என்பதை உணர்த்தவும், துன்பத்தில் துவண்டுபோன மனிதன் எப்படி துள்ளி குதித்து எழவேண்டும் என்பதை வெளிப்படுத்தவும், வாழ்வில் பாவம் மற்றும் இறப்பின் பயத்திலிருந்து மீண்டு வரவும், வாழ்க்கைக்கடலை கடப்பது எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் கடவுள் மனிதனாக பிறந்தார். மனிதனாக பிறந்த நம் எல்லாருக்கும் சாவு என்றால் […]

Continue Reading »

வெங்காயத் தண்டு வறை

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2016 1 Comment
வெங்காயத் தண்டு வறை

நாம் வட அமெரிக்காவில் பனிதாண்டி இளவெயினில் காலத்தைப் பற்றிக் கனவு காண ஆரம்பிக்கவிருக்கும் இத்தருணத்தில் வந்துள்ள தடுமன் காய்ச்சல்களில் இருந்து சற்று நிவாரணம் தர வெங்காயத் தண்டு வறை உதவியாகவிருக்கும். தற்போது உள்ளூர் மளிகைக்கடைகளில் வெங்காயத் தண்டுகள் கிடைக்கத் தொடங்கும். தேவையானவை ½ lbs தளிர் வெங்காயத் தண்டுகள் 1 மேசைக்கரண்டி நறுக்கிய சிறுவெங்காயம் 1 தேக்கரண்டி வெண்சீரகம் ¼ கோப்பை துருவிய தேங்காய்ப்பூ 2 துண்டாக்கிய உலர்ந்த செத்தல் மிளகாய் 2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் […]

Continue Reading »

TCTA தமிழர் திருவிழா 2016 கொண்டாட்டம்

TCTA தமிழர் திருவிழா 2016 கொண்டாட்டம்

பிப்ரவரி 06 , 2016 ஃபிப்ரவரி 6 அன்று TCTA பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. பனிப்பூக்கள் வாசகர்களுக்கு அன்றைய நிகழ்வுகளை விளக்க, எங்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை: – ஆசிரியர். காலையில் இருந்தே மனம் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருந்தது. இன்று டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலையின் பொங்கல் மற்றும் தமிழர் திருவிழா! அனைத்து நண்பர்களையும் குழந்தைகளையும் ஒன்றாகப் பார்க்கும் பெருவிழா!. முகநூலில் வெளியான விழா முன்னோட்டம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருந்தது. […]

Continue Reading »

தெறிக்க விட்ட சங்கமம் 2016

தெறிக்க விட்ட சங்கமம் 2016

வருடா வருடம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கொண்டாட்டத் திருவிழாவான ‘சங்கமம்‘, இவ்வருடம் ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ் மக்களின் பேராதரவுடனும், பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பினாலும், பல்வேறு கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பினாலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமாகப் போட்டுத் தாக்கும் குளிர், அன்று கொஞ்சம் போல் கருணை காட்டியது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அதற்கு முன்பே கூட்டம் குவியத் தொடங்கி இருந்தது. நுழைவு கை வளையம் […]

Continue Reading »

துருவக்கரடி தோய்தல் 2016  (Polar Bear Plunge)

துருவக்கரடி தோய்தல் 2016  (Polar Bear Plunge)

துருவக்கரடி தோய்தல் (Polar Bear Plunge) கொண்டாட்டம் ஒவ்வொறு ஆண்டும்  குளிர் காலத்தில் நடை பெறுகிறது. இதில் பலதரப்பட்ட தன்னார்வலர்களும் மற்றும் தன்னார்வல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாய்க் கலந்து கொள்கிறார்கள். உறைந்திருக்கும் ஏரிகளில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து, வெறும் நீச்சலுடையுடன் பனிக்கட்டிகளின் அடியில் இருக்கும் நீருக்குள் பாய்ந்து, கடும் குளிரில்   நீந்துவது இங்கு ஒரு பிரபலமான விளையாட்டு . இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை  விசேட ஒலிம்பிக் […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 3

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on February 28, 2016 6 Comments
பகுத்தறிவு – பகுதி 3

(பகுத்தறிவு – பகுதி 2) ஹிந்து மதம் குறித்து எழுதுவதாகச் சென்ற பகுதியில் சொல்லி விட்டேன். எழுதலாம் என்று தொடங்கினால் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் என்ன வேத வியாசரா? வால்மீகியா? ஆதி சங்கரரா? இல்லை ரமண மகரிஷியா? வேதம் அறிந்தவனா? இதிகாசங்களை முழுவதுமாகப் படித்தவனா? சமஸ்கிருதத்திலோ தமிழிலோ கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஞான இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையாவது முழுமையாகப் பயின்றவனா? பக்தி இலக்கியங்கள் எழுதியவர்கள் என்று கருதப்படும் உண்மையான ஞானிகளான பட்டிணத்தாரையோ, அருணகிரிநாதரையோ, திருஞான […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad