அன்றாடம்
தெறிக்க விட்ட சங்கமம் 2016
வருடா வருடம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கொண்டாட்டத் திருவிழாவான ‘சங்கமம்‘, இவ்வருடம் ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ் மக்களின் பேராதரவுடனும், பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பினாலும், பல்வேறு கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பினாலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமாகப் போட்டுத் தாக்கும் குளிர், அன்று கொஞ்சம் போல் கருணை காட்டியது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அதற்கு முன்பே கூட்டம் குவியத் தொடங்கி இருந்தது. நுழைவு கை வளையம் […]
துருவக்கரடி தோய்தல் 2016 (Polar Bear Plunge)
துருவக்கரடி தோய்தல் (Polar Bear Plunge) கொண்டாட்டம் ஒவ்வொறு ஆண்டும் குளிர் காலத்தில் நடை பெறுகிறது. இதில் பலதரப்பட்ட தன்னார்வலர்களும் மற்றும் தன்னார்வல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாய்க் கலந்து கொள்கிறார்கள். உறைந்திருக்கும் ஏரிகளில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து, வெறும் நீச்சலுடையுடன் பனிக்கட்டிகளின் அடியில் இருக்கும் நீருக்குள் பாய்ந்து, கடும் குளிரில் நீந்துவது இங்கு ஒரு பிரபலமான விளையாட்டு . இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை விசேட ஒலிம்பிக் […]
பகுத்தறிவு – பகுதி 3
(பகுத்தறிவு – பகுதி 2) ஹிந்து மதம் குறித்து எழுதுவதாகச் சென்ற பகுதியில் சொல்லி விட்டேன். எழுதலாம் என்று தொடங்கினால் பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் என்ன வேத வியாசரா? வால்மீகியா? ஆதி சங்கரரா? இல்லை ரமண மகரிஷியா? வேதம் அறிந்தவனா? இதிகாசங்களை முழுவதுமாகப் படித்தவனா? சமஸ்கிருதத்திலோ தமிழிலோ கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஞான இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றையாவது முழுமையாகப் பயின்றவனா? பக்தி இலக்கியங்கள் எழுதியவர்கள் என்று கருதப்படும் உண்மையான ஞானிகளான பட்டிணத்தாரையோ, அருணகிரிநாதரையோ, திருஞான […]
திருவிவிலிய கதைகள்: நீதிமானுக்கு சோதனையா?
திருவிவிலியத்தின் (பைபிள்) ஞான இலக்கியங்களுள் ஒன்று பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு என்னும் நூல். இது இலக்கிய நடையில் அமைந்த நூல். அதுல சொல்லியிருக்கும் ஒரு நிகழ்வை இப்பப் பார்க்கபோறோம். நம்முடைய தின வாழ்க்கையில…. அந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனையா… கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை…. நான் என பாவம் செய்தேன்….. எனக்குப் போய் இப்படி நடக்குதே…. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கோம். அவையெல்லாம் சோதனையா?……. தண்டனையா?….. ஒரு காலத்தில யோபுன்னு […]
சிகாகோ பொங்கல் விழா 2016 கொண்டாட்டம்
வருடாவருடம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வரும் சிகாகோத் தமிழ்ச்சங்கம், இவ்வாண்டும் ஏறத்தாழ ஆயிரம் தமிழன்பர்களுடன் கொண்டாடினார்கள். பொங்கல் விழாவானது.சனவரி மாதம் 23ம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது. சிகாகோ தமிழ்ச்சங்கம் வட அமெரிக்கத் தமிழ்மக்களின் முன்னோடிகளில் ஒன்று என்றே நாம் கூறலாம். இச்சங்கம் 46 வருடம் பழைமை வாய்ந்தது. இந்தச் சங்கம் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகத் தொடர்புகள், மற்றும் தமிழ் மொழிப்பாட சாலைகள் போன்ற சேவைகளை அளித்து வளர்ந்து வருகிறது. இம்முறை பொங்கல் விழா […]
கணிதன் இயக்குனர் T.N. சந்தோஷ் – நேர்முகம்
கேள்வி: உங்கள் முதல் படம் கணிதன், எந்த வகையைச் சேர்ந்தது. ? படத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: ஒரு ஹீரோ ஒரு வில்லன். இரண்டு பேரும் பெரிய புத்திசாலிகள். அவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் கணிதன். இதுல அதர்வா ரிபோர்ட்டரா நடிச்சிருக்கார். ஒரு ரிபோர்ட்டர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் கதை. எந்த வகைன்னு சொலனும்னா, இது சோசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம். கேள்வி: இந்தப் படத்துல நீங்க திரைக்கதையும் எழுதியிருக்கீங்க, டைரக்டும் செய்திருக்கீங்க. அந்த […]
உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை ! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் ! அந்த தமிழ் மறையை, வெறும் மூன்று மணி ஐம்பத்தி இரண்டு மணித்துளிகளில் ஒரே மூச்சாக மழை போல் பொழிய முடியும் என்று நிரூபித்தார் திருமதி பிரசன்னா சச்சிதானந்தன். மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ஜனவரி 24 அன்று மதியம் 12.05 தொடங்கியது. இடைவிடாத உரையாக 1330 குறள்களையும் , பொருளுடன் உரைத்தார். […]
சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி
நான் சென்னையில் இருந்து பதினைந்து வருடம் முன்பு அமெரிக்காவிற்கு வந்தேன். இங்கு வந்ததில் இருந்து தாயகம் நினைவு மேலோங்கி இருந்தது. விஜய் டிவி அல்லது ஜெயா டிவி பார்த்து அதில் பாடும் பாடகர்கள் திறமை கண்டு வியந்துள்ளேன். ஏதோ ஒரு வெளியூருக்கு வந்து தமிழ் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் இருக்கிறோம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஏக்கத்தைத் தகர்த்தெரிந்தது மினசோட்டா பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஒரு இசைக்குழுவான ஃபிரெண்ட்ஸ் கரியோக்கி. அவர்கள் சென்னை […]
எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை
திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும். என்ன வியப்பாயிருக்கா? ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார். அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம். கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில […]
பகுத்தறிவு – பகுதி 2
(பகுதி – 1) இந்தப் பகுதிக்கான முன்னுரையை எழுதி இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டாம் பகுதி எழுதும் “மனநிலை” (மூட்) வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கடவுளுக்கு நான் இதுபற்றி எழுதுவது பிடிக்கவில்லையோ? அவன்தான் தனது திருவிளையாடலினால் எனக்கு “மூட்” வரவிடாமால் செய்கிறானோ? இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடவுளுக்கு இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களில், அடுத்த வீட்டு மனிதருக்குக்கூட அவ்வளவாக அறிமுகமில்லாத என்னைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருப்பது சாத்தியமோ? அப்படியே தெரிந்து […]






