Archive for March, 2013
உலகச் செம்மொழி – அத்தியாயம் 2

நாம் தமிழகத்து சாலைகளில் செல்லும் போது இரு பக்கமும் உள்ள சுவற்றில் ”வீரபாண்டியார் அழைக்கிறார்”, ”நெல்லையார் அழைக்கிறார்” அப்படீன்னு பலப்பல ”ஆர்” அழைக்கிறதைப் பாத்து இருப்பீங்க. பாத்ததோட இல்லாம அவங்களை நினைச்சி சிரிச்சிட்டும் போய் இருப்பீங்க. தமிழில் “ஆர்” என்ற விகுதி ஒருவரை உயர்த்திக் குறிப்பிட பயன்படுகிறது. அது சரி sir. இப்ப எதுக்கு என்கிட்ட தமிழ் இலக்கணம் சொல்லுறீங்கனு கேக்கறீங்களா? இந்த “ஆர்” க்கு முன்னாடி ஒரு “ஸ்” சேத்துப் பாருங்க….
ஸ் + ஆர் =ஸ்ஆர் = sir
உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை “உலகத் தாய்மொழி தினம்” என்று ஒன்று கொண்டாடப்படுகிறது என்பது நானறிந்திராத ஒரு செய்தி. தமிழன்பர் ஒருவர் இந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல, இதன் மீது ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. வழக்கமாக எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் இணைய தளத்தைப் புரட்டத் துவங்கினேன். வழக்கமாக இணைய தளத்தில் கிடைக்கும் உண்மை மற்றும் அவரவர்களின் சொந்த அபிப்பிராயமென பல விபரங்கள் அறியப் பெற்றேன். அவற்றையெல்லாம் அறிவுக் கொள்முதலாக வைத்துக் […]