Archive for December, 2015
மழைத் துளிகள்
மழையின் கேள்வி !!!
விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!
மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்
தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே……….
சமீபத்தில் சென்னையில் அண்ணா சாலையில் பிரயாணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னையிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பல வருடங்களாகத் தக்கவைத்துக் கொண்டிருந்த எல்.ஐ.சி கட்டிடம் இருந்த திசையிலிருந்து தியாகராய நகர் நோக்கிப் பயணம். சென்னையின் கம்பீரமாகப் பல திரைப்படங்களில் காட்டப்படும் அண்ணா மேம்பாலத்தில் ஏறுகையில் தற்செயலாகக் கண்கள் காரின் கண்ணாடி ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்த்தன. அமெரிக்கன் கான்சுலேட்… அதன் காம்பவுண்ட் சுவர். அதை ஒட்டிய பிளாட்ஃபார்ம்…. கொளுத்தும் வெயில்.. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள்… தங்களின் வாழ்வே […]
ஒரு துளி கண்ணீர்
“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]
சமத்துவம்
அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]
சம்மதம் முதல் 5 நிமிடங்களில்
Category – career, business, personal development அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் […]
சொற்சதுக்கம் 5 – விடைகள்
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த பால் பாரம் பல் மாதா மாதம் தபால் அம்மா அதம் அரம் பதம் […]
சொற்சதுக்கம் – 5
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த (சொற்சதுக்கம் 5 – விடைகள்)
ஞாயிறே போற்றி!
தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு. நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு […]