admin
admin's Latest Posts
பீனோ க்ரிஜோ…
விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]
அஞ்சலம்மா
ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்
இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]
சங்கமம் 2017
தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]
நகுலேச்சரம்
இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும். தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள […]
மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King Jr.)
“ எனக்கு ஒரு கனவுண்டு …” (I have a dream…) என்று அமெரிக்கக் கறுப்பின மக்களின் குடியுரிமைக்குக் குரல் கொடுத்த அகிம்சைவாதி தியாகி போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் குறித்துப் பார்க்கலாம். இவரிற்குப் பெற்றார் கொடுத்த பெயர் மைக்கேல் லூதர் கிங் ஜூனியர் (Michael Luther King Jr). இவர் சனவரி மாதம் 15ம் திகதி, 1929ம் ஆண்டு ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா நகரி பிறந்தார். இவர் ஏப்ரல் 4ம் திகதி 1968ம் […]
முட்டை மீன் பொரியல்
பொதுவாக, மீனைக் குழம்பு வைத்தோ, பொறித்தோ சாப்பிடுவார்கள். மற்ற வகைச் சமையல்களில் பயன்படுத்துவது குறைவு தான். ஆனால், மீன் பல வகைச் சுவையை அளிக்கக் கூடியது. இதுவரை மீன் பொரியல் செய்திராதவர்கள், இதைச் செய்து பாருங்கள். மீன் சுவை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். சாதம் – மீன் குழம்புக்குக் கூட்டாகவும் சாப்பிடலாம், சப்பாத்தி உள்ளே வைத்து ரோல் (Roll) செய்தும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டால், இன்னமும் ஆரோக்கியம். தேவையான பொருட்கள் முள் அதிகம் இல்லாத உங்களுக்குப் பிடித்த […]
கல்லறை பேசுகிறது
அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]
தலைமுறைகள் …?
கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]
காதல் விளம்பல்கள்
காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]







