admin
admin's Latest Posts
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் டிசம்பர் – சனவரி மேடம் (மேஷம்) – பலவிதப் பொருட்கள் வருகை, மற்றும் காரியங்களில் வெற்றிகள் மாதக் கடைசியில் வரலாம். வேலைத்தள இடையூறுகள் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் தடைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் குன்றுதல். அவதானம் தேவை வயிற்றில் கோளாறுகள் வரலாம். பண்டிகை காலமெனினும் உணவு உட்கொள்ளல் குறைந்த நிலை. இடபம் (ரிஷபம்) – இம்மாதம் முக்கியமாக வாழ்க்கைச் சமநிலையில் […]
ஞாயிறே போற்றி!
தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு. நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு […]
சொற்சதுக்கம் – 5
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த (சொற்சதுக்கம் 5 – விடைகள்)
சொற்சதுக்கம் 5 – விடைகள்
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த பால் பாரம் பல் மாதா மாதம் தபால் அம்மா அதம் அரம் பதம் […]
சம்மதம் முதல் 5 நிமிடங்களில்
Category – career, business, personal development அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் […]
சமத்துவம்
அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]
ஒரு துளி கண்ணீர்
“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே……….
சமீபத்தில் சென்னையில் அண்ணா சாலையில் பிரயாணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னையிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பல வருடங்களாகத் தக்கவைத்துக் கொண்டிருந்த எல்.ஐ.சி கட்டிடம் இருந்த திசையிலிருந்து தியாகராய நகர் நோக்கிப் பயணம். சென்னையின் கம்பீரமாகப் பல திரைப்படங்களில் காட்டப்படும் அண்ணா மேம்பாலத்தில் ஏறுகையில் தற்செயலாகக் கண்கள் காரின் கண்ணாடி ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்த்தன. அமெரிக்கன் கான்சுலேட்… அதன் காம்பவுண்ட் சுவர். அதை ஒட்டிய பிளாட்ஃபார்ம்…. கொளுத்தும் வெயில்.. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள்… தங்களின் வாழ்வே […]
ஈழத்துச் சித்தர்கள்
சித்தில் வல்லவர் சித்தர் என்பது பண்டைய தமிழ் மக்களின் பாங்கான வாய்மொழி. சித்து என்பதற்கு அறிவு என்றும் ஒருபொருள் உண்டு. எனவே சித்தர்கள் என்பவர்கள் அறிவுடையார், புத்திஜீவிகள் (Intellects) என்றும் தற்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் ஈழத்திலும், தமிகத்திலும் சித்தர்கள் பலதர அறிவு சார்ந்த விடயங்களிலும், யோகமார்க்கத்திலும் வல்லவராயிருந்து வந்தனர். பலதுறைகளிலும் கவனம் செலுத்திய தமிழ்ச் சித்தர்கள் வைத்தியத் துறையிலும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர். சித்தர்கள் சத்திர சிகிச்சை முறை, மூலிகைத் தயாரிப்பு, தாவரவியல் என பலதரப்பட்ட […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-18
இன உணர்வு (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17) இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம். “பட்டினிப் பிசாசு தின்னும் ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும் என் கண்ணீரை என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும் […]







