admin
admin's Latest Posts
இனி ஒரு விதி செய்வோம்

“ஊழல்லில்லாத அரசாங்கம், பஞ்சத்தில் வாடாத மக்கள், பாரங்கள் வாட்டாத கல்வி, இருள் கவ்வாத சீரான மின்சாரம் என்று எத்தனையோ அடுக்கடுக்கான சாதனைகள் உங்களோட நான்குமுறை ஆட்சி காலத்திலேயும் நடந்திருக்கிறது. டூ தௌஸண்ட் டுவென்டியில் நிறைய முரண்பாடான சிக்கல்களையும் கசக்கி பிழிய பட்ட மக்களுக்கு கிடைச்ச விடிவெள்ளியாக உங்க ஆட்சி அமைந்திருக்கிறது. எப்படி சார்? தெளிந்த நீரோடை போல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க சர்த்தியமாக்க முடிந்தது?” “எங்களை பாதித்த வாழ்க்கையை, தப்பான வழிகள்ல யோசித்து, திருப்பி சம்பந்தப்பட்டவங்களுக்கு […]
சுமை தாங்கி

“வாங்க,வாங்க”என்று பாசத்துடன் வரவேற்ற பெற்றோரைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் ராதிகா .தன் இரு பிள்ளைகளையும் காரிலிருந்து இறக்கி வாடகையைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.”எல்லோரும் சௌக்யமா? மாப்பிள்ளை வரவில்லையா? எப்படி இருக்கிறார்?”என்று கேட்ட அப்பாவின் அன்பான கேள்விகளின் பதிலுக்கு ‘எல்லோரும் நலமே’ என்று தலையசைத்தாள் நந்திதா. “வா! காபிகுடி, டிபன் சாப்பிடு, களைத்து போய் வந்திருப்பே, வெந்நீரில் குளிச்சுட்டு வாங்க’ என்று இரு பேரன்களையும் கட்டியணைத்தபடி கூறினாள் அம்மா. இந்த வீட்டில்தான் எத்தனை மகிழ்ச்சி அலைகள்,.இதிலிருந்து ஒரு துளியாவது […]
அவள் குழந்தை

விமானம் கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிறாள். உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே பார்த்தேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் […]
அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் […]
தூரிகை

காரிகை ஒருத்தி கடைவிழி காட்டிக் காதலைச் சொன்னாள்! பேரிகை ஒலியெனப் பெரிதாய் மனத்துள் பூகம்பம் கிளம்பிற்று !! தூரிகை கொண்டு அவளெழில் செதுக்கக் கோரியது காதலுள்ளம் ! காரிகை அவளின் களைமுகம் நினைந்து கிறுக்கலைத் தொடங்கினேன்! பேரிகை முழக்கம் பூங்கொத்தாய் மலர்ந்திட பாவையழகு அசைபோட்டேன்!! தூரிகை எடுத்துத் துளிர்முகம் வடிக்க தூரத்து நிலவானாளவள் !!! காரிகை அவளின் களங்கமற்ற சிரிப்பு கவனமெங்கும் நிறைத்திட! பேரிகை இறைச்சலின்றி பெண்ணவள் […]
மினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம்

மினிமலிசம் (Minimalism) என்கிற சிக்கன வாழ்க்கை முறை குறித்து, அதனைப் பின்பற்றி வரும் திரு. நியாண்டர் செல்வன் அவர்கள் இந்த காணொளியில் பனிப்பூக்கள் வாசகர்களிடம் தனது கருத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அந்தக் காணொளியை வாசகர்கள் இங்கு காணலாம்.இதை வலையொலியிலும் கேட்கலாம்.
ஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம்

ஆயுள் காப்பீடு குறித்து பலருக்கும் பலவிதக் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்பெறும் வண்ணம் திரு. பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுடனான இந்த உரையாடல் அமைந்தது. ஆயுள் காப்பீட்டின் அவசியம், யார் யாருக்கு காப்பீடு தேவை, எந்தளவு காப்பீடு தேவை, எங்கு காப்பீடு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த உரையாடலில் ஸ்ரீராம் அவர்கள் எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு பெரும் பயனளிக்கும் பல தகவல்கள் பொதிந்துள்ள இந்த காணொளியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட்

கலை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆனா சீஸ்ட்ராண்ட் அவர்கள் யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டாவில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தெற்காசிய மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் காணப்படும் கலையம்சம் பொருந்திய பழம்பெரும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிட்டு இருக்கிறார். இந்த ஆய்வுகளுக்கென தொடர்ந்து தமிழ்நாடு சென்று வருபவர். ‘நான் மதுரை பொண்ணு’ என பெருமிதம் கொள்ளும் ஆனாவுடனான உரையாடலை இந்த காணொளியில் காணலாம்.