admin
admin's Latest Posts
சைக்கிள்

இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]
கபீர்தாஸ்

இந்தி இலக்கிய உலகினை ஆதிகாலம் (1050-1375), பக்தி காலம் (1375-1700), ரீதி காலம் (1700-1900), தற்காலம் (1900 முதல் இன்றுவரை) எனப் பகுத்துள்ளனர். பக்தி காலத்தில் இடம் பெறுபவர் கபீர்தாஸ். நிர்குண பக்தி, சகுண பக்தி எனும் பக்தியின் இரு நெறிகளில் நிர்குணத்தைச் சார்ந்தவர் கபீர். நிர்குண பக்தர்கள் ஞானிகள் ஆவர். இவர்களின் பக்தி நெறியில் வணங்கப்படும் இறைவனுக்குப் பெயர், உருவம், நிறம், குலம் ஏதும் கிடையாது. எங்கும் நிறைந்தவன்; உருவமில்லாதவன், சாதி, மத வேறுபாடின்றி இருப்பவன் […]
உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும் செய்திடுவோம்! கதிரவன் கொடுத்த உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின் செயல்தானே! வஞ்சனை செய்து வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில் நாம்தானே! உழவுத்தொழிலை உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது நாடன்றோ! உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும் செயலன்றோ! பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத் தடுத்திடுவோம்! பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப் […]
புதர்க் காடு

பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]
சாகித்ய அகாடமி

கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]
1917 – திரை அனுபவம்

முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட, இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை […]
எட்டாம் ஆண்டில் பனிப்பூக்கள்

இந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]
சமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்

வந்தவாசி, அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென…’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென…’ எனும் […]
மினசோட்டா மருத்துவர் ஆறுமுகம் – நேர்காணல்

மினசோட்டாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவர், திரு. ராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள். மருத்துவர் ஐயா என்று மினசோட்டாத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், பின்பு லண்டனிலும், அமெரிக்காவிலும் மேற்படிப்பை முடித்து, மினசோட்டாவில் இருபதாண்டு காலமாக மருத்துவச் சேவை புரிந்து வருகிறார். 2016 இல் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற இவர், மினசோட்டாவில் […]