admin
admin's Latest Posts
தீவிரவாதத்துக்கு தீர்வு?

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு அமைதி நிலவிய இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள், ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னரும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், உலகமே மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதை உணர்த்துகிறது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தில் நாடெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் தவழ்ந்து, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்திட வேண்டுமெனப் பிரார்த்திக்க தேவாலயம் சென்ற பலர் உயிரிழந்துவிட்டனர். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்களின் உதிரச் சிதறல், அந்த ஆண்டவரின் சிலையில் […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை […]
அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்

தமிழில் அகால மரணம் என்பது இயற்கையான இறப்பு இல்லை என்று பொருள்படும். தமிழ் மக்களில் ஈழத்து மக்களும், மலேசிய மக்களும் துப்பாக்கியின் பரிவிளைவுகளை அவர்கள் வாழ்நாட்களில் பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டு இருப்பவர்கூட. இன்று வட அமெரிக்க மண்ணில் வாழும் தமிழரும் அவ்வப்போது காணும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டனர் எனலாம். கடந்தவாரம் கூடி கொலராடோ மாநிலத்தில் 10 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற அகோரக் கொலம்பைன் பள்ளிக்கூடச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏழே ஏழு மயில்களிற்கப்பால் மீண்டும் இரண்டு மாணவர்கள் […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]
அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?

மண்ணின் மைந்தர் அடிப்படையில் குடியுரிமை சரிதானா என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வட அமெரிக்காவில் புகலிடம் கொண்டவர்களால் இந்தக் கருத்து பல திருத்தங்களுடன், புதிய கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமைக் கணக்கெடுப்புப்படி, இந்த நாட்டில் வாழும் 40 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அதே சமயம் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் அமெரிக்க நாட்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019

ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக ராஜேஷ் கோவிந்தராஜன்
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2019)

2019 இன் தொடக்கத்தில் வந்த ஹிட் பாடல்களின் எண்ணிக்கை, பிறகு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்குப் பிறகு ஸ்டார் நடிகர்களின் படங்கள் குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றால், ஹிட் ஆன படங்களில் பெரிய ஹிட் ஆன பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். சென்ற வருட இறுதியில் வெளிவந்த மாரி-2 படத்தில் வந்த ‘ரௌடி பேபி’ பாடலின் வீடியோ யூ-ட்யூபில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாகி, தென்னிந்தியப் பாடல்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்ற […]
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019

ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]
மை பூச ….

அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]