\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6

அமெரிக்கத் தேர்தல்  – பகுதி 6

(அமெரிக்கத் தேர்தல்  – பகுதி 5) ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் […]

Continue Reading »

பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது  தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]

Continue Reading »

இந்திய தரிசனம்

இந்திய தரிசனம்

நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, “வாடா மவனே வா” என்று எனக்காகவே வைத்ததைப் போலவும், வைவதை போலவும் இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் வை–ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை–பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் […]

Continue Reading »

எது பெண்மை ?

Filed in இலக்கியம், கதை by on June 26, 2016 2 Comments
எது பெண்மை ?

ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப,  அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]

Continue Reading »

செங்கை ஆழியான்

செங்கை ஆழியான்

1941  ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணத்தில்  ஒரு  சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர்   கல்வியிலும்   இலக்கியத்திலும்  பல்வேறு அரச  பணிகளிலும்  செய்த பல  சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “  செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]

Continue Reading »

பூந்தோட்டம் பராமரித்தல்: களிமண்

பூந்தோட்டம் பராமரித்தல்: களிமண்

மினசோட்டா மாநிலத்தில் பலவகையான மண்வகைகள் காணப்படுகின்றன. ஆறு, ஏரிகள் அதிகமுள்ள மினசோட்டாவில் தாவரவகைகள் எமது வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை வெவ்வேறாக  காணப்படுகின்றன. இவை ஒருபுறம் பிரதேச வெட்ப தட்ப நீடிப்புக்களைப் பொறுத்து அமைந்தாலும் வீட்டுத் தோட்டங்களையும், விவசாயங்களையும் பொறுத்தளவில் அவை மண்ணின் தன்மையைக் கொண்டும் அமையும் எனலாம். பண்டைக் காலத்தில் தமிழர் வாழ் ஊர்களில் நீர் நிலைக்கருகாமையில் கிண்டியெடுக்கப்படும் களிமண்ணானது வீடுகட்ட செங்கட்டிகளையும், கூரை வேய ஓடுகளையும், உணவைச் சமைத்துக்கொள்ளவும், நீரைச் சேகரித்துக் கொள்ளவும் உதவியாக […]

Continue Reading »

அப்பா…

Filed in இலக்கியம், கதை by on June 18, 2016 1 Comment
அப்பா…

மவுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 6

ஆட்டிஸம் – பகுதி 6

(பகுதி 5) ஆட்டிஸத்தை மட்டுப்படுத்துவதில் முதன்மையான வழிமுறையாகக் கையாளப்படுவது பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு (Applied Behavioral Analysis) என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த முறை சாதரணத் தேவைகளான பார்த்தல், கவனித்தல், படித்தல், உரையாடுதல், மற்றவர்களைக் கவனித்துப் புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைக் கற்றுக் கொடுக்கும் விதமாக அமைகிறது. இந்த முறை வகுப்பறைக் கல்வியாகவும், தினசரிக் குடும்பச் சூழல்களிலும் பயிற்றுவிக்கப்படலாம். இவை குழந்தைகளுக்கு ஒருவரோடு ஒருவர் பயிற்றுவிக்கும் சூழலிலோ, குழுவாக வகுப்பறை போன்ற அமைப்பிலோ கற்றுத்தர இயலும். சமூகம் […]

Continue Reading »

பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!

Filed in இலக்கியம், கவிதை by on May 29, 2016 0 Comments
பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!

பாலை தேசத்தில் பகலெல்லாம் காய்ந்து
நிசியில் தோன்றும் வெண்மதி வேளை
கண்டேன்!; கண்டேன்!
காதல் கன்மணியின் கருநிற விழியை
கண்டேன்! கண்டேன்!

Continue Reading »

உச்சி தனை முகர்ந்தால்

Filed in இலக்கியம், கதை by on May 29, 2016 5 Comments
உச்சி தனை முகர்ந்தால்

வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி  கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக்    கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad