\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

மீண்டு வாராய்!

மீண்டு வாராய்!

இறந்து விட்டான் என்றிருந்தோம்.. இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்.. இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும் இன்னுமொரு முறை பிறந்து வந்தான்!!! சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான்!! ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள்!! பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான் பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று.. பரலோகம் சென்ற அவன் பாதியிலே திரும்பி […]

Continue Reading »

காந்தி ஜெயந்தி நினைவூட்டல்

காந்தி ஜெயந்தி நினைவூட்டல்

பன்முறை படித்துக்கூறினாய் வன்முறை வழி ஆகாதென்று உன்னுயிர் போனது வன்முறை பேயதானால் முதன்முறை மானுடம் மறைந்தது உன்னுயிரை பறித்தெடுத்து பல்லுயிர் பறித்துக்கொண்டு இன்னுமேன் ரத்தவெறி இந்த இனவெறி ஜாதிவெறி மதவெறி கொண்ட நெறியர்கள் போர்வையில் வெறியர்களுக்கு மற்றவெறிகளை பின்னுக்குத்தள்ளி மதவெறிதனை முன்னிறுத்தும் ரத்தவெறி காட்டேரிகள் உன்வழி உன் பாதை பயணிக்கும் நாள்தனை எதிர்பார்த்து ஏங்குகிறோம் காந்தி எனும் சரித்திரசகாப்தம் என்றும் எம் நினைவில் ஏந்தி காந்தி கண்ட சாம்ராஜ்யம் என்று வருமென மனம் ஏங்கி காந்தி ஜெயந்தி […]

Continue Reading »

விவசாயி

Filed in கவிதை, வார வெளியீடு by on September 28, 2020 0 Comments
விவசாயி

ஏர்பூட்டி வயலுழுதான் ஏழைமகன் விவசாயி முத்துமணி வியர்வை முத்தாய் நிலத்தில் சிந்த அல்லும் பகலும்  அயராது பாடுபட்டு நிலத்தை பண்படுத்தி விதைத்தான் நெல்லதனை விதைத்த நெல் மழையில் மூழ்க –அவன் விழியில் கண்ணீர் கடலாய் பெருகியது கண்ணீர்க் கடலைத் துடைக்க கடவுள் கருணை கொண்டார் நின்றது மழை! வழிந்தோடியது வெள்ளம்! செந்நெல் செழித்தது – காற்றில் கதிர் ஓசை ஒலித்தது விவசாயி நெஞ்சில் ஆனந்த மழை பொழிந்தது கால நேரம் பார்த்து கதிரை அறுவடை செய்து காற்றில் […]

Continue Reading »

கவிதை காணவில்லை

Filed in கவிதை, வார வெளியீடு by on September 28, 2020 0 Comments
கவிதை  காணவில்லை

கவிதையைக் காணவில்லை! தேடி கொடுப்பீர்களா? பாதித்த  சொற்களைக் காப்பாற்றி எழுதி வைத்திருந்தேன் நெஞ்சாங்கூட்டில் மீண்டும் மீண்டும் தியானித்தேன் தனிமையில் உலாவினேன்.  கால்வாறும் மக்கள் சந்தையில் சிக்கல் பொருட்களின்  பரிமாற்றத்தில்   கவிதையைக் காணவில்லை தேடி கொடுப்பீர்களா?  அங்கெங்கோ கேட்டது போலிருந்தது என் சொந்த கவிதை வரிகள்  யாரோ எழுதிய பாட்டின் இரு புறத்திலும்  அய்யகோ! சினம் கொண்டதோ கவிதை இல்லை திருடிவிட்டாரோ யாராவது அடடா புரிந்தது இப்போது  சிறையிலிட்டிருந்தேன் நானே ஆணவத்தின் சிறைச்சாலையில்  அதற்காகத்தான் எட்டிப் பார்க்கின்றன […]

Continue Reading »

தூரிகை

தூரிகை

காரிகை ஒருத்தி கடைவிழி காட்டிக் காதலைச் சொன்னாள்!   பேரிகை ஒலியெனப் பெரிதாய் மனத்துள் பூகம்பம் கிளம்பிற்று !!   தூரிகை கொண்டு அவளெழில் செதுக்கக் கோரியது காதலுள்ளம் !   காரிகை அவளின் களைமுகம் நினைந்து கிறுக்கலைத் தொடங்கினேன்!   பேரிகை முழக்கம் பூங்கொத்தாய் மலர்ந்திட பாவையழகு அசைபோட்டேன்!!   தூரிகை எடுத்துத் துளிர்முகம் வடிக்க தூரத்து நிலவானாளவள் !!!   காரிகை அவளின் களங்கமற்ற சிரிப்பு கவனமெங்கும் நிறைத்திட!   பேரிகை இறைச்சலின்றி பெண்ணவள் […]

Continue Reading »

சுயநலம்

சுயநலம்

உதவி செய்வதே கடமையென்பான் உண்மையில் யாருக்கும் உதவமாட்டான் அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால் அதர்ம வழியில் சென்றிடுவான்!   தாய் தந்தையே தன் கண் என்பான் தாய் என்றே கருத்திற் கொள்ளான் அன்பே வாழ்வின் உயர்வென்பான் அன்பின் இலக்கணமே அறிந்திடான்!   பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால் பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான் வாய்மை சொல்வதே உயர்வென்பான் வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்!   உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான் உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான் கள்ளும் களவும் […]

Continue Reading »

மன அழுத்தம் தவிர்

மன அழுத்தம் தவிர்

பணமும் புகழும் காரும் வீடும்  எல்லாம் இருந்தும், பாதியில் போனாய் ஏன் நண்பா? தெரியாதா உனக்கு கடுகும் கூட கண்ணுக்கருகில் பாறை நிறைந்த மலையாய்த் தெரியும்!  மலையும் கூட தூரப் பார்வையில்  சிறிய கடுகாய் மாறித் தெரியும்!  கவலை கூட நெருங்கிப் பார்க்க அணையா நெருப்பாய்ச் சுட்டுத்தீர்க்கும்  அணையில் நிற்கும் நீரைப் போல  திறக்க முடியா மடையைப் போல அழுத்திப் பார்க்குக்கும் நம் மனதைக் கூட!  திறந்துவிட அணையும் தீரும் அழுதுவிட அழுத்தம் குறையும்!  பழுது பட்ட […]

Continue Reading »

நெஞ்சு பொறுக்குதில்லை

நெஞ்சு பொறுக்குதில்லை

நெஞ்சு பொறுக்குதில்லை துஞ்ச விடுவதுமில்லை வெஞ்சினம் மிகுந்து கிஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சித்துக் கொன்றவர்க்கு அஞ்சி நடுங்குவமோ கெஞ்சிக் குழைவமோ எஞ்சியிருக்கும் நாளெல்லாம் மிஞ்சிநிற்குமே இவ்வடுவும் வனத்து விலங்கதுவும் மனவொழுக்கம் கொண்டிருக்கும் இனத்துச் சோதரரை சினத்துக் கொல்லாதடா! அனத்திக் கெஞ்சியவரை கனத்தக் கழியாலடித்து பிணமாக்கி மகிழ்ந்தாயே தினவெடுத்த கல்நெஞ்சனே நனவுடன்தான் இருந்தாயா?   அதிகாரம் எவர்தந்தார் சதிகாரச் செயலதற்கு? விதிபோற்றவே காவலர் விதிமுடிக்கும் காலனல்ல உதிரஞ்சொட்டக் கதறியவரை சிதிலமாக்கித் தின்றாயே! மதியிழந்து போனீரே! உதிர்ந்தவை  இருஉயிரென்றாலும்  அதிர்ந்தது அகிலமன்றோ? […]

Continue Reading »

கொலைக் குற்றம்

கொலைக் குற்றம்

கண்களைக் குத்திக் கிழித்திடும் இமைகள்! நாவினைக் குத்தி நறுக்கிடும் பற்கள்! விரல்களில் புகுந்து வெளிவரும் நகங்கள்! பயிரினை மேய்ந்து பிரித்திடும் வேலிகள்!!!   சட்டங்கள் இயற்றிடத் துறையொன்று உண்டு! இயற்றியதைக் காத்திட காவலென்ற ஒன்று! காத்திடும் வேலையை அழித்தலாக்கியது என்று? வேலையைக் கொலையாய் மாற்றியது இன்று!!!   கால்வயிற்றுக் கஞ்சிக்குக் கால்கடுக்க உழைத்தவர்! காலையில் தொடங்கி காரிருளில் முடிப்பவர்! காலம்பல உழைத்தாலும் காசுபணம் காணாதவர்! காவல்துறை வன்முறைக்குக் காவாகிப் போனவரவர்!!!   அப்பாவைக் கண்முன்னே அடித்து நொறுக்குகையில் […]

Continue Reading »

அவன் போராளி

அவன் போராளி

வெடித்து முழங்கிய துப்பாக்கிச் சின்னங்களால் துளையுண்டு உயிர்த்தெழுந்த வெள்ளைப் பூக்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தக்கூடப் பிரக்யை அற்றுத்   தொலைவில் தன் பார்வையைப் பதித்தவாறே  வருகிறான் அவன் நிற்கக்கூட நாதியற்றுத் தளர்ந்துவிட்ட  வயோதிப மாதுபோல அவன்  சுமந்து வந்த AK-47… பசித்திருக்கிறது… “பையில் பாணும் தண்ணீரும் இருக்கிறது இரவு விடிகிறபோது அதிகாலையில்  பார்த்துக்கொள்ளலாம்” என முணுமுணுக்கிறது அவன்வாய்   இறந்துபோன தன் சகாக்கள் பற்றிய நினைவுகளோடு -தூக்கிப்போகிறான். அரையிருட்டில் சரசரவெனத் தூறிய மழைக்குள் சல்லடை போடுவதற்குப் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad