கதை
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…

வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும். ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]
அடி முதல்

“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]
முற்பகல் செய்யின்….

“நாராயண….. நாராயண….” சப்ளாக் கட்டையை இடது கையில் அசைத்துக் கொண்டு, இடது தோளிலிருந்து குறுக்குவாட்டாகத் தொங்கிக் கொண்டிருந்த தம்பூராவை வலது கையால் இசைத்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் நாரதர். நாரதர் என்றவுடன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். வேதங்கள் நான்கினையும், உபநிஷத்துகள் நூற்றுப் பதினெட்டையும், வியாகரணங்கள் பலவற்றையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் பல நீதி நூற்களையும் கற்றறிந்த தேஜஸ்வியான நாரதர், சிவாஜியின் தேஜஸுக்குச் சற்றும் ஈடு […]
கொரோனா… கொரோனா…

குறிப்பு: உலகம் முழுவதையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இது குறித்துப் பலவிதமான புள்ளி விவரங்களும், பாதுகாப்புக் குறிப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. அவையனைத்தையும் படித்துப் பயன்பெறும் அதே வேளையில், இதனையே சற்று நகைச்சுவையாக அணுகலாம் என்ற எண்ணத்தில் விளைந்த கற்பனையே இது. “வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற நம்பிக்கையில் படிக்க வேண்டிய, சாதாரணப் பொழுது போக்கு மட்டுமே!. “ஏன்னா… இருபத்தியோரு நாள் ஆத்துக்குள்ளயே மொடங்கிண்டு இருக்கிறது எப்டி?” நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே, […]
Kutty Story

‘வெல்கம் டு தி டுமீல் டாக்கீஸ் டாட் நெட். திரைவிமர்சனம் நிகழ்ச்சியில இன்னைக்கு நாம் பாக்க போற படம் டேஷ். டேஷ்னு’ சொன்ன உடனே எதோ கெட்ட வார்த்தைப் படம்னு நினைச்சிக்காதீங்க. ‘டேஷ்’ னா கோடிட்ட இடம். ஏன்னா, குவாண்டின் டாரண்டினோவே வந்து தமிழ்ப் படம் எடுத்தாலும், நான் இதையே தான் சொல்லப் போறேன். டெம்ப்ளட்ல டேஷ் போட்டு வச்சுக்கிட்டா படத்தோட பேர மட்டும் அதுல போட்டு புது வீடியோவ ரிலீஸ் பண்ணிடலாம். நீங்களும் வேற வேலை […]
உலகம் உன் பக்கம்

அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன […]
கடலலை

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம். மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் […]
சைக்கிள்

இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]
புதர்க் காடு

பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]
சாகித்ய அகாடமி

கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]