\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

ஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம்

ஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம்

ஆயுள் காப்பீடு குறித்து பலருக்கும் பலவிதக் கேள்விகள் இருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்பெறும் வண்ணம் திரு. பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களுடனான இந்த உரையாடல் அமைந்தது. ஆயுள் காப்பீட்டின் அவசியம், யார் யாருக்கு காப்பீடு தேவை, எந்தளவு காப்பீடு தேவை, எங்கு காப்பீடு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த உரையாடலில் ஸ்ரீராம் அவர்கள் எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு பெரும் பயனளிக்கும் பல தகவல்கள் பொதிந்துள்ள இந்த காணொளியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

Continue Reading »

நான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட்

நான் மதுரை பொண்ணு –  ஆனா சீஸ்ட்ராண்ட்

கலை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆனா சீஸ்ட்ராண்ட் அவர்கள் யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டாவில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தெற்காசிய மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் காணப்படும் கலையம்சம் பொருந்திய பழம்பெரும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிட்டு இருக்கிறார். இந்த ஆய்வுகளுக்கென தொடர்ந்து தமிழ்நாடு சென்று வருபவர். ‘நான் மதுரை பொண்ணு’ என பெருமிதம் கொள்ளும் ஆனாவுடனான உரையாடலை இந்த காணொளியில் காணலாம்.

Continue Reading »

அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்

அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன. அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது. இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் […]

Continue Reading »

புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்

Filed in கதை, வார வெளியீடு by on July 27, 2020 0 Comments
புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்

(“புது உலகம் எமை நோக்கி” என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) அறிமுகம் ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள்  […]

Continue Reading »

சுயநலம்

சுயநலம்

உதவி செய்வதே கடமையென்பான் உண்மையில் யாருக்கும் உதவமாட்டான் அதர்மம் செய்வது பாவமென்பான்– ஆனால் அதர்ம வழியில் சென்றிடுவான்!   தாய் தந்தையே தன் கண் என்பான் தாய் என்றே கருத்திற் கொள்ளான் அன்பே வாழ்வின் உயர்வென்பான் அன்பின் இலக்கணமே அறிந்திடான்!   பிறரில் குறைகாண்பது தவறென்பான்– ஆனால் பிறரில் குறையை மட்டுமே அவன் காண்பான் வாய்மை சொல்வதே உயர்வென்பான் வாய் திறந்து அதைச் சொல்லமாட்டான்!   உத்தமனாய் வாழ்வதே உயர்வென்பான் உலகில் அதமனாய் வாழ்ந்திடுவான் கள்ளும் களவும் […]

Continue Reading »

பக்ரீத்

பக்ரீத்

ஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு  அருளப்பட்டதைக் கொண்டாடும்  ஈகைத் திருநாளான  “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் […]

Continue Reading »

புளூபெரிப் பழங்களின் மகிமை

புளூபெரிப் பழங்களின் மகிமை

தற்போது எமது நாட்டில் வருடத்தின்  எந்த மாதத்திலும் புளூபெரி கிடைக்கக் கூடியதாக இருப்பினும், இந்தப் பழங்களுக்கும் பருவகாலங்கள் உண்டு. மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் புளூபெரி அறுவடை காலமாகும். காட்டு புளூபெரிகள் (Wild Blueberries) வட மினசோட்டாவில் ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும். இந்தச் செடிகள் ஏறத்தாழ அமெரிக்காவில் 38 மாநிலங்களில் வளர்கிறது. இதில் பத்து மாநிலங்களில் விவசாய உற்பத்திக்கென வளர்க்கப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, ஜார்ஜியா, இண்டியானா, மிஸிஸிப்பி, நியூ ஜெர்சி, வட […]

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 5

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 5

கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கீழே, இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர்கள் – […]

Continue Reading »

அந்திப் பூக்கள்

அந்திப் பூக்கள்

தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை, நாலு பக்கமும் விசாலாயமாய் வளர்ந்த தென்னை , மா வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம், அதைச் சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய்ச் சத்தம் செய்து கொண்டுள்ள வண்ண வண்ணப் பறவைகள். சுமார் காலை […]

Continue Reading »

பானு டீச்சர்

பானு டீச்சர்

பானு டீச்சர் – எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு நபர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வகுத்தவர் என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் என எல்லோரும் சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் ஒருஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதியதாக வகுத்துக்கொண்டு இருப்பவர் பானு டீச்சர் என்றுதான் அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள். ஒரு நடிகர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் , என்ன அடை மொழி வைத்துக் கொண்டாலும் , பொது மக்கள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad