\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கோவிட்-19 னால் இத்தேர்தலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா? திட்டமிட்டபடி, இந்த தேர்தல் நடந்து முடிந்துவிடுமா? இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பைத் தீர்மானிக்க போகும் முக்கிய காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் பதிலளித்துள்ளார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத் தமிழர்கள்

பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத்  தமிழர்கள்

படுப்பினும் படாது, தீயர் பன்னாளும் முன்னேற்றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமுறைவந்து அடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பியர்கள் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி!                                                            -பாரதிதாசன்   மேற்கூறிய பாரதிதாசனாரின் பாடலுக்கிணங்க  அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம்  இனி வரும்  தலைமுறைக்கும் தமிழைக்  கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபடுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது! ஆமாம்,தமிழே! அமுதே! என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒருவர் படித்த புத்தகத்தின் […]

Continue Reading »

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

நூற்றாண்டைக் கடந்து உலகளாவிய நிலையில் சரித்திரம் படைத்த நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்றாகும். இந்நூலகமானது பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. எண்ணற்ற மருத்துவச் சுவடிகளைக் கொண்டுள்ளது. அவை நம் பழந்தமிழரின் இயற்கை மருத்துவ அறிவையும் நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற தமிழ் மருத்துவ முறைகள் எனும் நூலினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நூல் உருவாக்கம்  ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, […]

Continue Reading »

என்னால் சுவாசிக்க முடியவில்லை

என்னால் சுவாசிக்க முடியவில்லை

“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது. இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் […]

Continue Reading »

கம்பனடிப்பொடி

கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]

Continue Reading »

தண்டனை

தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!!   நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்!   சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !!   யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க!   கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?   அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!   எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!!   கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]

Continue Reading »

இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்

இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்

ஜூன் 2 அன்று 77வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பைப் பற்றி, மினசோட்டாவைச் சேர்ந்த இசை கலைஞர்கள் திருமதி. லக்ஷ்மி, திரு. செந்தில், திரு. சதீஷ், திரு. சரவணன் மோகன் அவர்களுடன் ஒரு இசை சார்ந்த உரையாடல். நல்ல கேட்பனுபவத்திற்கு ஹெட்போனில் கேட்கவும். உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

நான்மணிக்கடிகை  காட்டும்  நீர்  மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]

Continue Reading »

இலட்சியப்பெண்

இலட்சியப்பெண்

மனிதஇனம்பிறந்தது அதில்பெண்ணினமும்கலந்தது! தாயின்கருவில்இருந்தபோது அடைந்திராததுன்பமுண்டோ? அதையும்வென்றுஜனித்துவிட்டாள் பூமிதனில்இலட்சியப்பெண்!!   வறுமைஎன்னும்காரிருள்  தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து  வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!!   எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண்!!   காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது! உறவுஎன்னும்ஓடம்கரைசேர  துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை!!                    –       சிவராசாஓசாநிதி

Continue Reading »

ad banner
Bottom Sml Ad