வார வெளியீடு
ஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்
1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில் புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று […]
போதை
போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க??’ ‘ஒண்ணுமில்ல’ ‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் […]
விண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை
வருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச […]
நாவிதம்
“ஏண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன கணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்ஷ்மி. “என்ன நெனச்சுண்டு இருக்கேள்? ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா?” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா? நேக்கு வந்தாப் பரவாயில்லயா?” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள். “சரிடி,ரெண்டு மாசத்துக்கு […]
அமெரிக்கத் தேர்தல் நடைமுறை
அமெரிக்கத் தேர்தல் நடைமுறை குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்த பகுதியில் விளக்குகிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்
சமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,
ஹாப்பி பர்த்டே!! சித் ஸ்ரீராம்
பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாளையெட்டி (மே 19) அவரை பற்றி, அவரது பாடல்கள் பற்றி இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் சித் ஸ்ரீராம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு இசை சார்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்
சொர்க்கம் நேரிலே!
செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே! செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்! ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]
அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்
தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள் கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் […]
எது?
அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!! – முனைவர்சு. சத்தியா






