\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

நல்லெண்ணங்கள் நாற்பது

நல்லெண்ணங்கள் நாற்பது

“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” என்றொரு பழமொழி உண்டு. பிரபா அனந்த் அவர்களின் “நல்லெண்ணங்கள் நாற்பது” என்ற கைக்குள் அடக்கமான மிகச் சிறிய நூல் நிறைந்த கருத்துக்களுடன் ஒரு “கையேடு” போலத் திகழ்கின்றது. ஒரு நூல் நயம் அல்லது திறனாய்வு என்றால் அந்த நூல் பற்றிய சில பல விளக்கங்களுடன் ஒரு சில எடுத்துக்காட்டுகளையும் தர வேண்டும். திருக்குறள் போல , ஒரு துளிக் (ஹைக்கூ) கவிதை போல நல்லெண்ணங்கள் நாற்பதில் எதைத் தொடுவது எதை விடுவது […]

Continue Reading »

உலகம் உன் பக்கம்

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
உலகம் உன் பக்கம்

அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன […]

Continue Reading »

கடலலை

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
கடலலை

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம். மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் […]

Continue Reading »

சைக்கிள்

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
சைக்கிள்

இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர்  படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]

Continue Reading »

கபீர்தாஸ்

கபீர்தாஸ்

இந்தி இலக்கிய உலகினை ஆதிகாலம் (1050-1375), பக்தி காலம் (1375-1700), ரீதி காலம் (1700-1900), தற்காலம் (1900 முதல் இன்றுவரை) எனப் பகுத்துள்ளனர். பக்தி காலத்தில் இடம் பெறுபவர் கபீர்தாஸ். நிர்குண பக்தி, சகுண பக்தி எனும் பக்தியின் இரு நெறிகளில் நிர்குணத்தைச் சார்ந்தவர் கபீர். நிர்குண பக்தர்கள் ஞானிகள் ஆவர். இவர்களின் பக்தி நெறியில் வணங்கப்படும் இறைவனுக்குப் பெயர், உருவம், நிறம், குலம் ஏதும் கிடையாது. எங்கும் நிறைந்தவன்; உருவமில்லாதவன், சாதி, மத வேறுபாடின்றி இருப்பவன் […]

Continue Reading »

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும்  செய்திடுவோம்!       கதிரவன் கொடுத்த   உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே  போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின்  செயல்தானே! வஞ்சனை செய்து   வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில்  நாம்தானே! உழவுத்தொழிலை  உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது  நாடன்றோ!   உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும்  செயலன்றோ!   பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத்  தடுத்திடுவோம்!   பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப்  […]

Continue Reading »

புதர்க் காடு

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
புதர்க் காடு

பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]

Continue Reading »

சாகித்ய அகாடமி

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments
சாகித்ய அகாடமி

கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]

Continue Reading »

1917 – திரை அனுபவம்

1917 – திரை அனுபவம்

முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக்  காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட,  இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை […]

Continue Reading »

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad