\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for April, 2013

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சென்ற சனிக்கிழமை, ஏப்ரல் 13 ஆம் திகதி, தமிழ்ப் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டங்கள், மேப்பிள் குரோவ் (Maple Grove) நகரிலுள்ள இந்து ஆலயத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ”பனிப்பூக்கள்” இதழை உள்ளூரில் வாழும் தமிழர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த அதன் ஆசிரியர் குழுவின் அனுபவம் பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சிக் குறிப்பு; மேப்பிள் குரோவ் கோயிலுக்கு சென்றவர்களுக்குத் தெரியும்; முதன்மை வாசலில் நுழைந்தவுடன் வலது புறம் திரும்பினால் கோயிலுக்கான பகுதிகளும், இடது புறம் திரும்பினால் […]

Continue Reading »

குழந்தை மனசு

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 0 Comments
குழந்தை மனசு

விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.  “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”  “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”  “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”  நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் […]

Continue Reading »

சொர்க்கத்திலே முடிவானது

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 3 Comments
சொர்க்கத்திலே முடிவானது

அதிகப் பரபரப்பில்லாமல் இருந்தது நெடுஞ்சாலை. துலூத் – 94 மைல்கள் எனக் காட்டியது வண்டியிலிருந்த ஜி.பி.எஸ். அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரத்தன். முன்னால் செல்லும் வண்டி மெதுவாகச் செல்வது போல தோன்றியது. பொதுவாகச் சாலையில் குறிப்பிட்ட வேகத்துக்கும் குறைவான வேகத்தில் செல்வோர் இடத்தடத்தில் சென்றால் அவர்கள் மீது அவனுக்கு கடுங்கோபம் வரும். அதுவும் அவர்கள் கையில் கைப்பேசியோ, உதட்டுச்சாயக் குச்சியோ இருந்துவிட்டால் அவர்களைக் கடக்கையில் கண்களில் கோபத்தைக் காட்டிச் செல்வான். இன்று அப்படியில்லாமல் வலத்தடத்துக்கு மாறி […]

Continue Reading »

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சி

உள்ளுர்த் தொலைக்காட்சி விளம்பரத்தில் மேசிஸ் (Macy’s) பாக்மன்ஸுடன் (Bachman’s) இணைந்து மினியாபொலி்ஸ் மேசிஸ் வளாகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 7 வரை மலர்க்கண்காட்சி ஒன்று நடத்துவதாகச் சொன்னார்கள். இந்தியப்  பின்னணியில் அமைந்திருப்பதாகச் சொன்னது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. வானம் மழை பெய்யட்டுமா அல்லது பனி பொழியட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நன்னாளில் குடும்பத்துடன் கிளம்பிப் போனோம். நகர மையத்தில் கார் நிறுத்த இடம் தேடி அலைந்த போது, இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டாமோ […]

Continue Reading »

அடைந்ததென்ன? இழந்ததென்ன?

Filed in இலக்கியம், கவிதை by on April 16, 2013 1 Comment
அடைந்ததென்ன? இழந்ததென்ன?

இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?

சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்

சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்

மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்

மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்

உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்

ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்

Continue Reading »

மனசாட்சி

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 0 Comments
மனசாட்சி

விடிந்தும் விடிந்திராத காலைப் பொழுது.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் தன் தலையில் இடி விழுந்தது போன்றதொரு பெரும் சத்தமொன்றை உணர்ந்தான். மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அவனுக்குள் ஏதோவொன்று தூங்காமல் விழித்துக் கொண்டு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்குமாம், அதனால்தான் பத்துக் குழந்தைகள் அடுத்தடுத்துப் படுத்து தூங்கும் கல்யாண மண்டப வராந்தாவில் கோபியின் அம்மா வந்து “கோபி, கோபி” என்றழைக்கும்போது கோபி மட்டும் எழுகிறான், மற்ற ஒன்பது சிறுவர்களும் நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்கின்றனர். உறங்கும் கோபியினுள்ளே உறங்காமல் விழித்துக் […]

Continue Reading »

வண்ணம் தீட்டுக

வண்ணம் தீட்டுக

Continue Reading »

திரைப்படத் திறனாய்வு – பரதேசி

திரைப்படத் திறனாய்வு – பரதேசி

65 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களே தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திய உண்மைப் பதிவுகளை மையமாக கொண்டு படைத்திருக்கும் பாலாவின் மற்றுமொரு சீரிய படைப்பு. ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவது சமரசம் செய்யாமல் கதை சொல்லும் பாங்கில் தான். மனிதக் குலத்தின் கருமையான பகுதியைத்  துகிலுரித்துக் காட்டுவதில் வல்லவர் பாலா. வேறு நாடுகளுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர் அனுபவித்த பல துன்பங்களைக் கதைகளாகப் படித்திருப்போம். ஆனால் நம், சொந்த மண்ணிலேயே கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்ட மக்களின் கதை தான் பரதேசி. […]

Continue Reading »

பாவேந்தர்

பாவேந்தர்

“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் – தமிழென்
அறிவினில் உறைதல் கண்டீர்!”

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 3

உலகச் செம்மொழி – அத்தியாயம் 3

போன அத்தியாயத்த படிச்ச ஒரு தமிழ் ஆய்ந்த நண்பர் ஒருத்தர், தமிழ் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வழங்கியுள்ளது என்று நீங்க எழுதுனதப் படிக்க. ஆச்சரியமாகவும், அருந்தகவலாகவும் இருந்தது. இச்சொற்கள் மற்ற மொழிகளில் கையாளப்பட்டது எப்போது எனும் ஆதாரக் கட்டுரைகள், குறிப்புகள் ஏதும் உங்களிடம் இருப்பின் அவற்றின் விவரங்களை வெளியிட முடியுமான்னு கேட்டாங்க.. ஏன்னா அவுங்க, இணயத்துல பல வார்த்தைகளுக்கு மூலம் தேடி பார்க்கும் போது அது பெரும்பாலும் old French, Latin , Greek, middle English லேயிருந்து வந்ததாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் இருந்து வந்ததாக இருக்குன்னு ஒரு சந்தேகத்த கேட்டு இருந்தாங்க.

Continue Reading »

banner ad
Bottom Sml Ad