\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for June, 2014

படம் வரைதல்

படம் வரைதல்

படம் வரைந்தவர்- ஸ்னிக்தா மது, வயது 8  

Continue Reading »

உழைப்பின் மகத்துவம்

Filed in இலக்கியம், கதை by on June 11, 2014 0 Comments
உழைப்பின் மகத்துவம்

“அப்பப்பா…. இந்த வேகாத வெயில் இப்படி வாட்டி வதைக்குதே” என்று புலம்பிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தாள் கமலா. அப்போது, எதிரே வந்த தனது இளமைக்காலத் தோழி ராதாவைக் கண்டாள். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ‘உன் மகன் சுரேஷ், மருமகள் சுமதி எல்லாரும் எப்படி இருக்காங்க’ என்று இராதா, கமலாவிடம் கேட்டாள். ‘ம்ம்ம்….’ எல்லாரும் நல்லா இருக்காகங்க’ என்று கமலா கூறினாள். ‘ஆமா, நீ முதல்ல நல்லா குண்டா இருந்த, ஆனா இப்ப இப்படி இளைச்சு போயிட்டியே’ […]

Continue Reading »

இனிய சந்திப்புக்கள்

இனிய சந்திப்புக்கள்

முன்குறிப்பு – இந்தக்கதை 1600 களில் அமெரிக்க வடகிழக்குப்பாகத்தில் குடியேறிய ஐரோப்பிய மக்களுக்கும் ஆதிவாசிகளிற்கும் இடைப்பட்ட தொடர்புகளை விவரிக்கிறது. களைத்திருந்த புருவத்துடனான டார்சன் தனது கண்ணோட்டத்தை புல்மேட்டுக்கு அப்பால் மலைச்சாரலிடையே ஒடிவரும் ஆற்றை நோக்கிச் செலுத்தினார். ஆமாம் இன்றும் சரக்குப்பண்டங்களை ஏற்றிவரும்  ஓடங்கள் வருவதாகத் தெரியவில்லை. மெதுவாக அடுப்பங்கரையில்   எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குப்  பக்கத்தில் உள்ள மேசை வாங்கில் குடும்பத்தினருடன் வந்து அமர்ந்தார். டார்சன் அவர் மனைவி, மகன் ஒலிவர், மகள் பெர்டசியுடன்  புதிய இங்கிலாந்து என்று […]

Continue Reading »

நிறம் தீட்டுங்கள் – கருப்பு குருவி

நிறம் தீட்டுங்கள் – கருப்பு குருவி

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 13

உலகச் செம்மொழி – அத்தியாயம் 13

அத்தியாயம் 12 செல்ல இங்கே சொடுக்கவும் தமிழ் கூறும் நல்லுலகில் தமிழின் பெருமை என்று எதைச் சொல்லுவது? தமிழிலிருந்து கிழைத்து வளர்ந்த மொழிகளைப் பற்றிச் சொல்வதா, அல்லது ஆதி மனிதக் கதை சொல்லுவதா, எம் மதங்களின் மூலமும் தமிழே என்ற பெருமையைச் சொல்லுவதா? .. அனைத்தும் சொல்லுவது என்று முடிவெடுத்து, ஆதி மனிதக் கதையில் ஆரம்பிக்கின்றேன். ஆதிமனிதக் கதை என்றால் ஆதாம் ஏவாள் கதையா? அது கிருத்துவக் கதை ஆயிற்றே! கிருத்துவம் யூதமும், அரமாய் மொழியும் பேசிய […]

Continue Reading »

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

”கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்” மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தனது அற்புதத் தமிழால் இவ்வாறு விளக்கி எண்ணற்ற இளைஞர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தவர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை . இந்தத் தொடரின் தலைப்பான “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்பது அவரின் புகழ் பெற்ற “தமிழன்” என்ற பாடலில் வரும் பல்லவியே. […]

Continue Reading »

கத்தரிக்காய் பொரியல் கறி

Filed in அன்றாடம், சமையல் by on June 10, 2014 1 Comment
கத்தரிக்காய் பொரியல் கறி

கத்தரிக்காயைக் கழவி 2 அங்குலத்துண்டுகளாக நறுக்கி சுமார் 5 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவிடவும். பின்னர் நீரில் இருந்து அகற்றி, லேசாகப் பிழிந்து, நீரை அகற்றி, மஞ்சள் மற்றும் உப்பும் சேர்த்துப் பிரட்டவும்

சுடான கொதி எண்ணெய்த் தாழியில் உடன் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்

Continue Reading »

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3   

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3   

புகைரதம் (The Train) 1944 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் கர்னல் ஃபிரெஞ்சு கலை பொக்கிஷங்களை ஒரு புகைரதத்தில் ஏற்றி ஜெர்மனிக்கு  அனுப்புகிறார். அதையறிந்த   ஃபிரெஞ்சு போராட்டக்கார புகைரத கண்காணிப்பாளர்  ஒருவர் கலைப் பொருட்கள்  சேதமாகாமல்  புகைரதத்தை தடுத்து நிறுத்த பாடுபடுகிறார். இது 1964 ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போர்காலத்  திரைப்படமான இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. நூற்றிமுப்பத்து  மூன்று  நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம்  5.8 மில்லியன் அமெரிக்க வெள்ளி […]

Continue Reading »

மல்லிகைப்பூ

மல்லிகைப்பூ

எமது தமிழ்க் கலாச்சாரத்தில் பாண்டியர் காலத்தில் இருந்து இன்றுவரை பெண்கள் தலையில் சூடும் மல்லிகை பற்றி பலவித பாக்களும், பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. இலங்கை, இந்திய, மலேசியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மல்லிகைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அவர்கள் தினசரி வாழ்விலும், வழிபாடுகளிலும் மல்லிகைப்பூவை,  தொடர்ந்து பாவிப்பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம். மேலும் தமிழகத்தை எடுத்தோமானால் பல்லாயிரமாண்டு பழமைவாய்ந்த மதுரை மாநகர்  தனக்கென உரிய பூவாக ‘மதுரை மல்லியைச்” (Jasmine சமபக்) சூடிக்கொள்ளுகிறது. மனத்தைச் சாந்திசெய்யும் மல்லிகையின் அற்புதமான மணம் […]

Continue Reading »

கண்ணதாசன்

கண்ணதாசன்

“அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, அவரை மிக நெருக்கமாக, நன்றாக அறிந்த ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை. நாம் கவிஞரைப் பற்றி முதலில் பார்ப்போம். சிறுகூடல்பட்டியில், சாத்தப்பன், விசாலாட்சி தம்பதியருக்கு 1927ஆம் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad