Archive for September, 2014
மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)
மினசோட்டா மாநில இந்தியக் குழுமியம் கோலாகலமாக 2014ஆம் ஆண்டுக்கானபண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மினசோட்டா மாநிலத் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழா மினசோட்டா மாநில ஆளுனர் மதிப்புக்குரிய மார்க் டெய்ட்ன் (Mark Dayton) அவர்களின் அனுசரணையுடன், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏறத்தாழ 10,000 மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. வருகை தந்தவர்கட்கு நல்லெண்ணத்தைப் பகிரும் வகையில் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]
எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்
இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் […]
சுமக்கும் நினைவுகள்
தளிர்க் கரங்கள் பற்றி நின்ற
தண்மை இன்றும் நினைவை வருடுது
சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்
சடுதியில் வந்து சாகசம் புரியுது….
தமிழனென்று சொல்லடா – அருணகிரிநாதர்
ஏற்கனவே எழுதியுள்ளபடி, தமிழுக்குத் தொண்டு செய்த பெரியவர்களைப் பற்றி எழுதுவதே இந்தத் தொடரின் நோக்கம். மேற்கத்திய மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர் சமுதாயம் மட்டுமின்றி, தினந்தோறும் தமிழ் தமிழென மேடைகளில் முழங்கி, தமிழால் வயிற்றுப் பிழைப்பை நடத்தி, ஆனால் தமிழுக்கென எந்தவிதத் தியாகமும் புரிந்திடாத போலித் தமிழறிஞர்கள் பலரும் அறியாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இன்னொரு மாபெரும் தமிழறிஞர் அருணகிரிநாதர். அவர்கள் அறிந்து கொள்ள முயலாததற்குப் பல சொந்த லாபங்களே காரணமென்று அவர்களை ஒதுக்கிவிட்டு […]