Archive for December, 2014
மின்னேசோட்டா பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்

மின்னேசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் அட்வான்செட் (Advanced) எனப்படும் கல்விக்கான மிக உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மினசோட்டா தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழு பரிந்துரையை அண்மையில் வழங்கியிருக்கிறது. அட்வான்செட் (www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம் ஆகும். இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9

தகுதிக்கேற்ற தொழிலின்மை தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது. “தகுதி வேலை ஊதியம் சமன்பாடு குழம்பிய நிலையில் இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான் ஒரு பிராங்கெனினும் என் […]
இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்

தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]