Archive for August, 2015
திருக்குறளும் இளஞ்சிறகுகளும்
உலகத்து மொழிகளுள் முதன்மையான செம்மொழியாம் தமிழ்மொழியின் மகுடத்தை என்றுமே அலங்கரிக்கும் அழகான சிறகு திருக்குறளாகும். திருக்குறள் வள்ளுவரால் உலக மக்களுக்காக கட்டித் தரப்பட்ட அறிவுக் களஞ்சியமாகும். விவிலியத்தைத் தொடர்ந்து அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறளே. எந்த மண்ணில், எந்தக் காலத்தில், எவர் படித்தாலும் படிப்பவருக்கும் படிக்கும் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைவது திருக்குறளின் பெருஞ்சிறப்பு. இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள், வெறும் மதிப்பெண்ணிற்காக மனப்பாடம் செய்யும் வரிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த […]
இந்தியா 69
29 மாநிலங்கள் தமிழ் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட அலுவலக மொழிகள், சில மதங்கள், பல சாதிகள், கணக்கில் அடங்கா கடவுள்கள், இயற்கை மற்றும் இன வேறுபாடுகள், அனைத்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் , இத்துணை வேற்றுமைகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகக் கடந்த அறுபத்தி ஒன்பது ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பது நம் இந்திய நாடாகும். பல தலைவர்களின் வழிகாட்டுதல்கள், பல்லாயிரக் கணக்கில் களபலிகள் மற்றும் தொடர்ச்சியான தியாகங்களின் பயனாக நம்மை ஆண்டு வந்த அங்கிலேயர்களை […]
வேலை
கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]
மன்மத வருட மாத பலன் – ஆவணி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வடஅமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஆவணி மாதம்: ( ஆங்கில மாதங்கள்: ஆகஸ்ட்-செம்டெம்பர்) மேடம் (மேஷம்) – பெரும்புகழ் எதிர்பார்க்கலாம், உடல் சுகம் குறைவு, உணவு உட்கொளல் குன்றுதல், வியாதி பீடைகள், காய்ச்சல், மற்றும் துர்செயற்பாடுகளில் இருந்து அவதானம் தேவை, துணைவி, பிள்ளைகள் எதிர்ப்புக்களால் கஷ்டங்கள் ஏற்படலாம், இடபம் (ரிஷபம்) – பொருள், காசு பண இலாபங்கள் வரும், தொழிலில் முட்டுக்கட்டை ஏற்படலாம், வாழ்க்கைத் துணையிலான தடைகள் வரலாம், எதிராளிகளினால் மனப்பயம் […]
மரணம் மகத்தானது
மரணமே, நீ மரிக்க மாட்டாயா?
மண்டிக் கிடக்கும் ஊடக மெங்கும்
மடலாய்ப் பிறந்து மலையாய் வளர்ந்து
மனதை அரித்த மடமை வரிகள்!
உண்டோ இல்லையோ என்ற சர்ச்சையில்லை!
உயர்குலம் இழிகுலம் என்ற பேதமில்லை!
உலகில் பிறப்பது எதுவும் நிலையில்லை!
உன்னதத் தத்துவமிதை உணர்த்தா வேதமில்லை!
மரண தண்டனை
தவறும் மானுடர்க்குத் தண்டனை சரியோ
திருந்தத் தரும் சந்தர்ப்பம் பெரிதோ….
தரணியின் இண்டு இடுக்கெலாம் இடியாய்
தகர்த்திடும் விவாதம் இஃதே இன்று……
கடவுள் தந்த உயிரைப் பறிக்க
கனம் கோர்ட்டாருக்கு உரிமை உளதோ…
களவு செய்தாலும் கலகம் செய்தாலும்
கொடுந் தீவிரத்தால் கொலைகள் புரிந்தாலும்….
மாலையில் யாரோ மனதோடு பேச
”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாடிக்கொண்டிருந்த யாழினியின் பாடலுக்குக் கடலலைகள் இசை மீட்டின. தனது காதலனின் வருகைக்குக் காத்திருக்கும் யாழினியைத் தென்றல் தழுவிக் கொண்டிருந்தது. அமுதனின் வருகையைக் கண்டதும் யாழினியின் விழிகள் சூரிய ஒளியாகப் பிரகாசித்தது. தனது வருகையின் ஆனந்தத்தால் யாழினியின் மனதில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை அவளது விரிந்த உதடுகளின் வழியாக கண்ட அமுதன் மயங்கி அவளைக் கட்டியணைத்தான். கடலலையின் ஓசையோடு தங்கள் காதல் காவியங்களைப் பேசத் தொடங்கினர் இந்த இளஞ்சிட்டுக்கள். நான்காம் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13) எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர். “அகதியென்று ஆன பின்னால் ……………………….. ‘ஐம்பதால் […]