Archive for January, 2017
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]
சங்கமம் 2017

தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]
நகுலேச்சரம்

இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும். தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள […]
மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King Jr.)

“ எனக்கு ஒரு கனவுண்டு …” (I have a dream…) என்று அமெரிக்கக் கறுப்பின மக்களின் குடியுரிமைக்குக் குரல் கொடுத்த அகிம்சைவாதி தியாகி போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் குறித்துப் பார்க்கலாம். இவரிற்குப் பெற்றார் கொடுத்த பெயர் மைக்கேல் லூதர் கிங் ஜூனியர் (Michael Luther King Jr). இவர் சனவரி மாதம் 15ம் திகதி, 1929ம் ஆண்டு ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா நகரி பிறந்தார். இவர் ஏப்ரல் 4ம் திகதி 1968ம் […]
முட்டை மீன் பொரியல்

பொதுவாக, மீனைக் குழம்பு வைத்தோ, பொறித்தோ சாப்பிடுவார்கள். மற்ற வகைச் சமையல்களில் பயன்படுத்துவது குறைவு தான். ஆனால், மீன் பல வகைச் சுவையை அளிக்கக் கூடியது. இதுவரை மீன் பொரியல் செய்திராதவர்கள், இதைச் செய்து பாருங்கள். மீன் சுவை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். சாதம் – மீன் குழம்புக்குக் கூட்டாகவும் சாப்பிடலாம், சப்பாத்தி உள்ளே வைத்து ரோல் (Roll) செய்தும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டால், இன்னமும் ஆரோக்கியம். தேவையான பொருட்கள் முள் அதிகம் இல்லாத உங்களுக்குப் பிடித்த […]
கல்லறை பேசுகிறது

அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]
தலைமுறைகள் …?

கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]
காதல் விளம்பல்கள்

காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]
சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்

கலங்கிய காளை கழனியிலும் வேலையில்லை களத்தினிலும் பணியுமில்லை கணினிகளைத் தாம் நோக்கி காளையர்கள் போனதனால் கண் கலங்கிய காளை! களத்து மேட்டிலும் வேலையில்லை கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை கரிசல் காட்டை விலைபேசிய காட்டுமிராண்டிகள் கண் கலங்கிய காளை! கட்டித் தழுவுவார் யாருமில்லை கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை கார்மேகமும் கை கொடுக்கவில்லை கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா கண் கலங்கிய காளை! திரைகடலெனத் திரண்ட தமிழினம் திக்கெட்டும் ஒரே இசை ! என் தமிழனின் பறை இசையடா ! […]
சிதம்பரம் – பாகம் 1

“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]