Archive for January, 2017
பேர்ள் ஹார்பர் – பகுதி 2

(பகுதி 1) 1940ம் ஆண்டு மத்தியில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை பேர்ள் ஹார்பரில் நிறுத்தியது ஜப்பானை பதட்டமடையச் செய்தது. பசிஃபிக் பகுதியில் தனது எல்லையை விரிவடையச் செய்ய முயன்ற ஜப்பானுக்கு, அமெரிக்காவின் இந்தச் செயல் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. ஜப்பானிய அரசில் ராணுவ அதிகாரிகள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த காலமது. மிதவாதியான, அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோவுக்கு அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை மூலம் பெட்ரோலிய இறக்குமதிக்கான தடையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பதே எண்ணம். ஆனால் […]
உரிமைகள் மசோதா – 1

உரிமைகள் மசோதா இந்த இதழ் வெளியாகும் பொழுது, டானல்ட் ஜான் ட்ரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றிருப்பார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்பு வெள்ளை மாளிகை, மேலவை மற்றும் பிரிதிநிதிகள் சபை ஆகிய மூன்றும் குடியரசுக் கட்சியின் வசமாகியுள்ளது. அரசாங்கத்தின் சக்தி ஒரே இடத்தில் குவிந்து விட்டால் யதேச்சாதிகாரம் தலை தூக்க நேரிடலாம் என்பதால், சரிபார்த்தலுக்காக (checks and balances) வாக்கெடுப்பு முறைப்படி உருவாக்கப்பட்டதே இந்த அவைகள். இவற்றின் உறுப்பினர்கள் சட்டங்கள் மேற்கொள்ளும் பிரிவு (legislative branch) , […]
பொங்கலோ பொங்கல்

பொழுது சாயும் நேரத்துலே பொதுவான சாலை ஓரத்திலே பொசுங்கும் குப்பைக் கூளமுமே போகி வந்ததென அறிவிக்குமே !! குப்பைக் காகிதம் மத்தியிலே குறுகிய எண்ணக் கசடுகளும் குன்றத் தோன்றிய சுயநலமும் கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !! மறுநாள் காலை வைகறையில் மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை மனதில் நினைந்து வழிபடவே மாநிலம் முழுதும் கூடினரே !! முற்றம் நடுவினில் பானைவைத்தே முனைந்து சுற்றிய மஞ்சளுமே முழுதாய் நிறுத்திய கரும்புடனே மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !! கழனி காடு […]
பேர்ள் ஹார்பர்

டிசம்பர் 7 1941 – போர் முன்னறிவிப்பு எதுவுமின்றி ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கிய தினம்; அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்றான பேர்ள் ஹார்பரை 353 போர் விமானங்கள் கொண்டு ஜப்பான் தாக்கிய தினம்; 2403 அமெரிக்க வீரர்கள் மாண்டு போன தினம்; 1178 பேர் படுகாயமடைந்த தினம். 5 போர்க்கப்பல்கள் உட்பட 18 கப்பல்கள் அழிக்கப்பட்ட தினம். உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட தினம்; உலக நாடுகள் பலவற்றின் இன்றைய நிலைக்கு காரணமான தினம்; மொத்தத்தில் […]
திருமலை திருக்கோணேச்சரம்

தக்கிண பூமி எனப்படுவது நவீன அரசியல் எல்லைகள் தாண்டிய தமிழர் பூமியைக் குறிப்பிடும் . இதில் தற்போதைய தென்னிந்தியப் பிரதேசமும் குறிப்பாகத் தமிழ்நாடும், இலங்கை தீவும் சேர்த்து கடல் மேற்காணப்படும் நிலப் பரப்பைக் குறிக்கும். தமிழர்கள் வழிபாட்டில் சிவன் வழிபாடு தொன்மை வாய்ந்தது. பண்டய ஈசன் வழிபாட்டுத் தலங்கள் தக்கண ஈச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் திருக்கோணேச்சரமாகும். இலங்கையின் வடகிழக்குக் கரையில் பாறைமுனையில் வங்காள விரிகுடாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடம் திருகோணமலை ஆகும். இவ்விடம் […]