Archive for September, 2018
மழை இரவு !

மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா ! மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு ! மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு ! மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]
இனவாதமே பிணமாகு

கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான் – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே! எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]
கலைஞர் எனும் பிரமிப்பு

அண்மையில் காலமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் தவிர்க்க முடியாத தலைவராக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய குறிப்புகள் இங்கே குறுக்கெழுத்துப் புதிர் வடிவில் தரப்பட்டுள்ளன. விடுவித்து மகிழுங்கள்! இடமிருந்து வலம் கருணாநிதியின் தாயார் பெயர் (5) சாதி வேறுபாடற்ற சமூகம்,, சுமூகமாக வாழ்ந்திட கருணாநிதி முன்னெடுத்த அரசுக் குடியிருப்புத் திட்டம் (8) தனது பதினெட்டாம் வயதில், […]