Archive for April, 2020
உழைப்பாளர் தின உரையாடல் – திரு. மதுசூதனன்

உலகமெங்கும் உழைப்பாளர் தினம் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்படுவது ஏன்? உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை? அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது? வாருங்கள்.. கேட்போம்.. அறிவோம்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
ஜெயகாந்தன் நினைவு உரையாடல் – திரு. மதுசூதனன்

திரு. மதுசூதனன் உடனான எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய நினைவு உரையாடல். உரையாடியவர் – திரு. சரவணகுமரன்.
அடி முதல்

“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]
தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு

இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]
வளரும் வணிகங்கள்

உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]
சாபம் பொய்யாகட்டும் ….

மகா அசுரன் கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் இனிய பல சம்பவங்கள் நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட, மருத்துவர்களோ…. கொரோனாவையும் நோயாளியையும் சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம் பிறக்கவில்லை??? நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே… சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே… நீ , கொரோனாவை […]
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்

ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.
உலக புத்தக தினம் – திருமதி. பிரசன்னாவுடன் உரையாடல்

உலக புத்தக தினத்தையெட்டி திருமதி. பிரசன்னா அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.