admin
admin's Latest Posts
மினசோட்டாத் தமிழர்கள் பல்தேசகொண்டாட்டத்தின் மத்தியிலே மங்கள மத்தாப்பு

செயின்ட் பால் நகர ரிவர் சென்டரில் நாதஸ்வர கானம் தனியாகத் தமிழன் செவிக்குச் செழிப்பைத் தருகிறது. அதனுடன் வருகை தந்த யாவரும் அவர் இதயத் துடிப்புடன் இன்பமாக இணைகிறது இனிய தவில் மேளம், அதி உற்சாகத்துடன் கால்களைச் சும்மா ஒரிடத்தில் நின்று பார்க்காமல் துள்ள வைக்கிறது ஆடி அடிக்கும் தமிழ்ப்பறை வித்தகர் அருகில் கூடிக் குதிக்கிறார்கள் இளம் நாட்டியத் தம்பதிகள். ஏறத்தாழ 90 சமூகங்களில் 30 மேற்பட்ட சமூகக் கண்காட்சிக் கூடாரங்களில் தமிழர் கூடாரத்தின் கும்மாளம் வருவோர் […]
மினசோட்டா பன்னாட்டு பன்சமூகக் கொண்டாட்ட விழா 2017

பன்தேச விழாவானது குதூகலமாக சென்ற 85 வருடங்களாக மினசோட்டா மாநில சர்வதேச நிறுவனத்தினால் (The International Institute of Minnesota) நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புதிதாகக் குடிபுகுந்த அமெரிக்கரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மினசோட்டா மக்களுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் பனிகாலம் மாறி இளவெனில் காலத்தின் வெய்யில் உந்தலில் உள்ளூர் மக்கள் உற்சாகமாகக் கலந்து கொள்ளும் வகையில் அழகிய ஆற்றோரக் கரை மண்டபத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா மே மாதம் 4இல் […]
மே மாதம் மினசோட்டா மீன் பிடிப்பு ஆரம்பம்

பல்லாயிரம் மாநில வாசிகள் தம் பனிகாலத்தைப் பின்வைத்து கோடையில் காலெடுத்து வைக்கும் முதல் பொழுதுபோக்கு நாள் மினசோட்டா மீன் பிடிப்பு தொடக்க நாள் எனலாம். இது வழமையாக அன்னையர் தினத்திற்கு முதல் நாள் வருவதினால் சில வீடுகளில் தகராறு ஏற்படுவதுண்டு. எனினும் மினசோட்டாவில் மீன் பிடிக்கும் அன்னையருக்கு இது இரு கொண்டாட்டங்களினால் உவகையடையும் நாள் என்று நாம் கருதிக்கொள்ளலாம். இயற்கையன்னை தனது எழிலை இதமாகப் படைத்துள்ளாள் எம் மாநிலத்தில். மினசோட்டா மாநிலத்தை 10,000 ஏரி மாநிலம் என்று […]
பாகுபலி – The Conclusion

பாகுபலி வழக்கமான இந்தியச் சினிமா அல்ல என்பது நிச்சயம். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம். பல ஆண்டுகளைத் தாண்டியும் பேசப்படப் போகும் படம். பேருழைப்பு தாங்கிய அசாதாரண வணிகச் சினிமா. இந்தியப் புராண அம்சங்களைக் கமர்ஷியலாகச் சொல்லத் துணிந்த கதை. மிகுந்த பொருட்செலவில், பலரது கடும் உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் எழுப்பப்பட்ட கேள்வியான “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” இப்படி எதிர்பார்ப்பு எழுப்ப நன்றாகவே உதவியது. […]
வாழையிலை விருந்து

மினசோட்டா தமிழ் சங்கம் மூன்றாவது ஆண்டாக வாழையிலை விருந்து விழாவை, இந்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி செண்டரில் நடத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை, வாழையிலையில் பரப்பி விருந்து படைத்தனர். முருங்கைக்காய் சாம்பார், மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, திணை பாயாசம், அப்பளம் என சுவையான தமிழர் விருந்து, வந்திருந்த விருந்தினரைக் கவர்ந்தது. அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு இங்கு. சரவணகுமரன்
இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம் புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]
ஆட்டு மூளை வறுவல்

ஊர் கோவில் திருவிழாவிற்கு, படையலுக்கு ஆடு அடித்து உணவு சமைக்கும் போது, ஆட்டின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்துவிடுவார்கள். மூளையை உப்பு போட்டு வறுத்துக் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்குக் கொடுப்பார்கள். சிலர் முட்டை, வெங்காயம் போட்டு பூர்ஜி மாதிரியும் செய்வார்கள். உலகமெங்கும் உள்ள நாடுகளில், விதவிதமான வகைகளில், மூளை சமைக்கப்படுகிறது. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நம்மூர் வறுவல் வகை. குழந்தைகளுக்குத் தேவையான DHA, மூளையில் மிகுந்து இருப்பதால், அவ்வப்போது சமைத்துக் கொடுக்கலாம். […]
எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண். இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், […]
தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]