\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

மன்மத வருட மாத பலன் – கார்த்திகை மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on October 25, 2015 0 Comments
மன்மத வருட மாத பலன் – கார்த்திகை மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் கார்த்திகை – ஆங்கிலத்தில் ஆக்டோபர் – நவம்பர் மேடம் (மேஷம்) – உடுப்பு ஆபரணங்கள் வருகை, நினைத்தவை கைகூடுதல், சந்தோசம். எதிரி பயங்கள் உண்டாதல், மாத இறுதியில் பயம் நீக்கம். குடும்ப மனத்தாபங்கள், வீட்டில் பிள்ளைகளினால் சிரமங்கள் ஆகலாம். இடபம் (ரிஷபம்) – மனம் மகிழ்வுதரும் மாதம், உடல் ஆரோக்கியம் குன்றலாம். தொழிலில் இடையூறு, காணி, நிலம் சொத்துக்களால் ஆதாயம் வரலாம். மனதில் தாழ்ந்த […]

Continue Reading »

யார் அந்த இராவணன் பகுதி – 1

யார் அந்த இராவணன் பகுதி – 1

வலவன் ஏவா வான ஊர்தி விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்கக் காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட்  (Orville Wright)  வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் (Wright brothers) முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் […]

Continue Reading »

ஆட்டிஸம்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 3 Comments
ஆட்டிஸம்

வாழ்க்கையில் இதற்கு முன் கேட்டிராத வார்த்தை… கேட்ட முதல் முறை எனக்குத் தோன்றிய உணர்வு, “இது கடைசி முறையாக இருக்காது என்பதே”…  புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே, ஆனாலும் கற்றுக் கொண்டு சாவதானமாய் அடுத்த விஷயத்திற்குப் போய்விடும் ஒரு வார்த்தையல்ல “ஆடிஸம்” என்பதை நானும் எனது மனைவியும் மிகவும் விரைவிலேயே உணர்ந்தோம். எங்களின் வாழ்வின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், இரண்டறக் கலக்கவிருக்கும் ஒரு வார்த்தை, ஒரு வாழ்க்கை என்பதை முதல் முறையாகக் கேட்கையில் […]

Continue Reading »

நிலாவரை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
நிலாவரை

யாழ்ப்பாணத்தில் உள்ள  நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]

Continue Reading »

காமத்தின் தொடக்கம்

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 1 Comment
காமத்தின் தொடக்கம்

அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?

செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?

Continue Reading »

மினசோட்டா மக்கள் அறிகுறி

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
மினசோட்டா மக்கள் அறிகுறி

உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக […]

Continue Reading »

காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்

Filed in அன்றாடம், சமையல் by on October 25, 2015 0 Comments
காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்

தமிழரின் பாரம்பரியங்களில் காட்டுப் பன்றி வேட்டையானது வில்லேந்தும் வேந்தனில் இருந்து, சேனைப் பயிர் செய்த செவ்விளங்காளைகள் தொட்டு, வேட்டையாடும் வன்னியர் வரை யாவரும் விரும்பிச் செய்த கருமம். தக்கிண பூமியில் இந்தியக் கண்டம் தொட்டு இலங்கை வரை பரந்து வாழ்ந்த வளமான வயல் காட்டு, நாட்டரிசியும், வாயூறும் வகை வகையான வனவிறைச்சிகளையும் சுவைக்கும் தமிழர் யாவரும் உட்கொண்ட உணவு பன்றி. இன்று மினசோட்டா மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியிலும், அயல் விஸ்கான்சின் மாநிலத்திலும் இருந்தும், கனேடிய ஒன்டாரியோ மாகாணத்தின் […]

Continue Reading »

ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்

ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை. ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம். ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு […]

Continue Reading »

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on October 25, 2015 0 Comments
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம், சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உலகிலுள்ள அத்தனைக் கலைச் செல்வங்களையும் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கச் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்பதே அவரின் அறிவுரை. தமிழர் எட்டுத் திக்கல்ல பதினாறு திக்குகள் என்று கூடச் சொல்லலாம்.  பல செல்வங்களைச் சேர்த்தோம். கலைச் செல்வங்கள் என்று குறிப்பாகக் கூறமுடியாது. ஆனால் பிறந்த தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளோம் என்றே குறிப்பிட வேண்டும். அதுபோன்ற சாதாரணப் […]

Continue Reading »

அந்தமும் ஆதியும்

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 1 Comment
அந்தமும் ஆதியும்

இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி

Continue Reading »

ad banner
Bottom Sml Ad