\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

நிலையாமை

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2015 0 Comments
நிலையாமை

  இடுப்பு வலியால் இல்லாள் துடிக்க இங்கும் அங்கும் இவன்நடை பயில இருக்கும் அனைத்து இதந்தரு மனிதரும் இதமாய் வருடி இவர்கட்கு உதவிட இரவு முழுவதும் இடையறாத் துடிப்புடன் இழுத்துப் பிடித்த இவளின் உறுதியும் இறைவன் அருளும் இணைந்து செயல்பட இவ்வுலகு தோன்றிய இணையிலாப் பிறப்பு இனிய குழந்தை இன்னல் துரத்தி இன்பம் கொடுத்து இமைக்கும் முன்னரே இரத்தம் கொதித்து இளமை எய்திட இரவு பகலென இருபொழுதிலும் உழைத்து இரந்து பிழைத்திடும் இழிநிலை ஒதுக்கி இகத்தில் அனைத்தும் […]

Continue Reading »

இராமரின் இரு முகங்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 2 Comments
இராமரின் இரு முகங்கள்

இறைவன் பூமியில் தினம் தினம் பல அவதாரங்களாக தோன்றி வாழ்த்திக்கொண்டு இருக்கிறார். தந்தையும் தாயும் நமக்கு முன்னறி தெய்வமன்றோ? விஷ்ணு பகவானும் இப்பூவுலகில் பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் சிறந்ததாகப் பத்து அவதாரத்தைச் சொல்லுவர். அந்தப் பத்து அவதாரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது இராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள். இவ்விரு அவதாரங்களைப் பூரண அவதாரம் என்று சொல்லுவர். மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல், தாயின் வயிற்றில் தோன்றி, பிள்ளைப் பருவம் தொடங்கி இறப்பு வரை இருந்தபடியால் அவ்வாறு […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]

Continue Reading »

மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2015 0 Comments
மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

இலங்கை யாழ்ப்பாணத்தில் கறி வாழைக்காய் அல்லது சமைக்கும் வாழைக்காய், சாம்பல் மொந்தன் எனும் வகை வாழைக்காய்களைப் பல வகையான சம்பல் மற்றும் பச்சடிகளிற்கும் பாவிப்பர். இதனை  இந்தோனேசிய மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களும் சமையலில் உபயோகிப்பர். வாழைக்காயானது உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விடக் குறைந்த சக்கரையைக் (low glycemic index) கொண்டது. ஆயினும் அதன் உயிர்ச் சத்து (vitamin C) உயர்ந்ததாகவே காணப்படும். மொந்தன் வாழைக் காய்ச் சம்பல் மதிய  உணவுடன் சேர்த்துக் கொள்ளச் சிறந்த பக்க […]

Continue Reading »

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on February 28, 2015 0 Comments
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாதம்  உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். பல செழிப்பு மிக்க மொழிகள் அதிகார பலம் பொருந்திய சில மொழிகளால் தொடர்ந்து வழக்கொழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த நல்லவர்கள் சிலரின் முயற்சியால் யுனெஸ்கோ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தினம் தான் இந்த உலகத்தாய் மொழி தினம். ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதம் 21ஆம் திகதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலங்காட்டியில் ஒரு திகதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு குறிப்பிட்ட தினமாக […]

Continue Reading »

மஞ்சள் ஹாஃப் சாரி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 2 Comments
மஞ்சள் ஹாஃப் சாரி

சுவாரசியமாகக் கல்லூரி நண்பன் ஒருவன் வாட்ஸப்பில் அனுப்பியிருந்த வீடியோவை பாத்ரூமில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். ‘ஏங்க.. யாரோ தொத்தாவாம் .. இந்தியாலேருந்து கூப்பிடறாங்க’ கதவைத் தட்டினாள் மகா. ‘இந்தியாவிலிருந்தா? திரும்பக் கூப்பிடறேன்னு சொல்லி நம்பர் வாங்கி வெச்சுக்கோ’ கண்ணை செல் ஃபோனிலிருந்து எடுக்காமல் சொன்னான் சேகர். ‘சீக்கிரமா வாங்க.. உள்ளே போய் அரை மணி நேரமாவுது’ வீடியோ முடிந்த பாடில்லை .. பாவ்லாவுக்காக ஃப்ளஷ் பண்ணிவிட்டு வெளியே வந்தான் சேகர். மகா கொடுத்த நம்பரைப் பார்த்தால் […]

Continue Reading »

லெமுரியா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
லெமுரியா

லெமுரியா பற்றி ஏற்கனவே பல விடயங்களைப்  பனிப்பூக்கள் இதழ்களில் பார்த்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லெமுரியா என்ற கண்டம் பற்றிய மூல வரலாற்றைப் பார்க்கலாம். சுமார் 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்குத் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற தீவில் லெமுர் என்ற விலங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விலங்கு மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான ஒரு மூலமாக இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்களால் நம்பப்பட்டது. இந்த வகை விலங்குகள் பார்ப்பதற்கு 50% குரங்கு, 25% மனிதன், 10% பூனை, 15% அணில் […]

Continue Reading »

எம். கே. தியாகராஜ பாகவதர்

எம். கே. தியாகராஜ பாகவதர்

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை” சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகள் இவை! பதினான்கு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து தமிழ்த் திரையுலகில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவரின் இறுதிக் கால வார்த்தைகள் இவை! பளபளக்கும் சரீரம், கருகருத்த நீண்ட கேசம், பட்டுச் சட்டை, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, ஜவ்வாதுப் பொட்டு, வைரக் கடுக்கன், பத்து விரல்களிலும் மோதிரம், கணீரென்ற குரல் இவற்றின் மொத்த உருவமாக, ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்துடன் […]

Continue Reading »

ஊட்டச்சத்தும் ஊகங்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
ஊட்டச்சத்தும் ஊகங்களும்

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது, நமக்கு மட்டுமல்லாது நமது பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டுதலுக்கும் உதவும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு விழிப்புணர்வு நோக்கில் எழுதப்பட்டதே தவிர பரிந்துரை அல்ல. மார்ச் மாதம் ஊட்டச்சத்தினை வலியுறுத்தும் மாதம் ( National Nutrition month). ஊட்டச்சத்து எனும் சொற்பிரயோகம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் மட்டுமே தொடர்புடையது என்று பலரும் நினைக்கிறோம். நம் அனைவருக்கும் உடல் முக்கியமானதொரு சொத்து. சுவர் இருந்தால் தான் சித்திரம் […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10) பண்பாட்டுச் சிக்கல் உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் தனித்துவமான மொழி, பண்பாடு என்பன இன்றியமையாதனவாக அமையப் பெற்றிருக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் தமது தனித்துவத்தின் அடையாளங்களான இவற்றை விட்டுக்கொடுக்க இலகுவில் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இவை சவால் நிறைந்ததாக மாறியிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற பலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமது பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றனர். கலாசார விழாக்களை வருடந்தோறும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad