admin
admin's Latest Posts
சச்சின் டெண்டுல்கர்
நூற்றி இருபது கோடி மக்களைக் கொண்டு மதம், மொழி, இனம், பொருளாதாரம், தொழில் எனப் பல வகைகளில் பிளவுபட்டு, வலுவான மாற்று கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு – எதிரிகள் தங்கள் நாட்டைத் தாக்கினாலும், சொந்த நாட்டினர் விண்வெளிச் சாகசங்கள் நிகழ்த்தினாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்ற மனப்பாங்குடன் நடந்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு – பல மணி நேரங்கள் ஒத்த கருத்தைக் கொண்டு, அதிக கவனத்துடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது, சச்சின் டெண்டுல்கர் என்ற […]
ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு – காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடுகளான நீதி, நேர்மை, அகிம்சை இவற்றை அடியொற்றிச் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவர். உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராக இருந்தவர். 1947 முதல் 1964 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். 1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேருவுக்கும், ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால். உருது மொழியில் ஜவஹர்-இ-லால் என்றால் சிகப்பு நகை என்ற பொருள். ரோஜா நிறத்தில் பிறந்த குழந்தைக்குப் […]
இருபத்தி நான்கு மணி நேரம்
முன்குறிப்பு: ஆங்கிலத் தொலைக் காட்சித் தொடர் “24” பார்த்திருப்பீர்கள். அதனை அடியொற்றித் தமிழில் ஒரு தொடர்கதை எழுதலாமென்ற யோசனை இன்று காலை படுக்கையை விட்டெழும் பொழுது தோன்றியது. உடனே செயல்படுத்தத் துவங்கினோம். அந்த ஆங்கிலத் தொடரில் வருவது போல், இந்தக் கதையில் நடக்கும் சம்பவங்கள் நிஜ மணித்துளிகளில் (Real-time) நடந்தேறுகிறது. அதைவிடுத்து வேறெந்த விடயமும் அந்தத் தொடரைப் பார்த்து எழுதப்பட்டதல்ல என்பதை இப்பொழுதே உறுதிமொழியாய் உரைக்கின்றோம். திங்கட் கிழமை காலை 8.00 மணி கணேஷ் – நம் […]
ஆரம்பம்
தமிழ்த் திரைப்படங்கள் மேற்கத்திய திரைப் படங்களைப் போல பிரம்மாண்டமான முறையில் வர ஆரம்பித்துக் காலங்கள் பல ஆகிவிட்டன. ஒரு நூறு மைல் வேகத்தில், தடையேதுமில்லாத அகலமான நெடுஞ்சாலைகளில், பல கார்கள் பறந்து செல்வதும், அதன் மத்தியில் கதா நாயகனும், வில்லனும் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் காரில் துரத்திக் கொண்டு பயணிப்பதும் சர்வ சாதாரணமான காட்சிகள். இந்தியா ஏழை நாடு, சுமார் முன்னூறு மில்லியன் மக்கள் நாளுக்கு ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர் […]
கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்
சென்ற கட்டுரையில் பருவத்தில் தோன்றி மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதலைக் கவியரசர் எப்படி இயற்கையுடன் இறண்டறக் கலந்தது என உவமித்தார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மனித உயிரனங்களை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விடக் காதல் மேன்மையான உணர்வு என்பதை எப்படித் தனது பாடல்களில் வடித்துள்ளார் என்று காணலாம். உலக மக்கள் அனைவரும் போற்றும் மிக உயர்ந்த உன்னத உறவு தாயுறவு. காதல் அந்தத் தாயுணர்வையும் கடந்தது என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர். […]
தமிழ்ச் சங்கக் கோடைச் சுற்றுலா – பெற்றோர் நேர்காணல்
கோடையில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சுற்றுலாவில், பனிப்பூக்கள் குழுவினர் சிலர் பங்கேற்றோம். பொழுதுபோக்கும் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் குழந்தைகளும் பெற்றோரும் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் காண வந்திருந்த மூத்தவர்கள் பரவசத்துடன் அவர்களைக் கண்டு மகிழ்ந்திருந்தனர். அமெரிக்க நாட்டை பற்றியும், குறிப்பாக மினசோட்டாவிலுள்ள தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றிய அவர்களது கருத்தையறிய மினசோட்டாவில் தங்களது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்கு வந்திருக்கும் திரு. கண்ணன், திருமதி. மோகனா அவர்களை எங்களது பனிப்பூக்கள் இதழுக்காக […]
களவினால் ஆகிய ஆக்கம்
வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”. […]
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர இளவரசன் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இவர் புகழ் பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அறியப்படுகின்றது. இக்கதை அந்த நாட்களின் பெரும் அரசுகளான சேர சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலை நகரும் கடற்கரைப் பட்டிணமும் கடல் கொண்டதுமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் மற்றும் அவனது மனைவியான கண்ணகியினது கதையைக் கூறுவதே இந்நூல். இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒரு சாராரும் எட்டாம் நூற்றாண்டில் […]
சமுதாயத்தில் பெண்களின் நிலை
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை, அந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும். ஏனெனில் பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள். இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. ஏனென்றால் நம் இந்திய தேசம் பெரும்பாலும் கிராமப்புறங்களால் […]
இந்திரா காந்தி
ஆணாதிக்க மனப்பாங்கு கொண்டஇந்தியாவில் வலுவான அதிகார பலத்துடன் மிகவும் உயர்ந்த பதவியிலமர்ந்து நாட்டை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி இந்திரா காந்தி. 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், ஜவஹர்லால் நேருவுக்கும் , கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சினி நேரு. அவர் பிறந்த கட்டத்தில் அவரது தாத்தாவும், தந்தையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தனது நோயுற்ற தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார் இந்திரா. காவலதிகாரிகள் நேரு சிறையிலிருந்த காலத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்து […]







