admin
admin's Latest Posts
வாழிய மகாத்மா
சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?
சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?
சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?
நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?
நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?
நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..
”இவர் எப்பவும் இப்படித்தான், சொல் பேச்சுக் கேக்கறதே இல்லை. தன் பொண்டாட்டி, குழந்தை குடும்பம்னு ஏதாவது நெனப்பு இருந்தாத்தானே.. பரோபகாரம், மத்தவாளுக்குச் சேவை செய்ரோம் பேர்வழின்னு, சொந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையே இல்ல”…. சரஸ்வதி மாமியின் புலம்பல் தொடர, பொழுது புலர்ந்தது என்ற எண்ணத்துடன் பதில் எதுவும் கூறாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று கிளம்பத் தயாரானார் சாம்பு மாமா. தனது மஞ்சள் பையில், தர்பை, பூணூல் எனத் தர்ப்பணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டார். […]
திருப்புறம்பியம்
காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]
முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்
கோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன். “ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா?” தான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள். கையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன். “ஆ” என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு “என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் […]
JUST JESS
சாலை நெளிந்து வளைந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நடுநிசியைக் கடந்த நேரம். அடர்த்தியான மேகங்களிடையே தனது ஒளிக்கதிரை எப்படியாவது செலுத்தி விட நிலவு முயன்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் மேகத்தைக் கடந்து விழுந்த ஒரு சில ஒளிக்கீற்றையும் தரையில் விழுந்திடாதவாறு மறித்திருந்தது. வினோத்தின் காரிலிருந்து விழுந்த வெளிச்சம் மட்டும் அந்த கும்மிருட்டை இரண்டாகப் பிளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்த சின்ன பூச்சிகள் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் […]
கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் – தீஞ்சுவை தரும் தத்துவ நன்முத்தா? தேனமுதூறும் தெவிட்டாத காதலா? இந்தியத் தேசத்தில் திரைப்படங்கள் தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைய இருக்கின்றது. இந்த நூறு ஆண்டுகளில், திரைப்படங்கள் பல பரிமாணங்களைக் கடந்து பயணித்துள்ளது என்பது நாமறிந்ததே. இந்தப் பயணத்தில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்த திரைப்பட உலகம், ஒரு சராசரி இந்தியனின் முழுநேர வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக ஆட்கொண்டு விட்டது என்றே கூறலாம். நல்லதோ, கெட்டதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, பாடலை, […]
மகாத்மா
உலகில், நோம்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் கூற்று. சாப்பாட்டைக் குறைத்து, ஏதோவொரு கடவுளின் பெயரை நாள் முழுதும் சொல்லிக் கொண்டிருப்பதல்ல வள்ளுவன் கூறும் நோம்பு. செயல் திருத்தம் என்பதே நோம்பு எனும் தமிழ் வார்த்தையின் சிறப்புப் பொருள் மற்றும் தத்துவார்த்தமான விளக்கம். தான் செய்யும் தவறுகளை உணர்ந்து, செய்யும் செயல்களைத் திருத்திக் கொண்டு நல்வழிப் படுவது என்பது நோம்பாகும். அதுபோல் நல்வழிப் படுபவரின் எண்ணிக்கை குறைவதே, பொருளில்லை, புகழில்லை, மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை எனப் பலவகையானவை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் விளக்கம்.
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்
இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]
கண்ணிவெடிப் பூமியிலே
அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்
ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…
வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்
வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்
பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…
லால் பகதூர் சாஸ்திரி
பாரத நாட்டின் பெருந்தலைவர்கள் பலரை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. பலரது தியாகங்களும் உயர்ந்த கொள்கைகளும் அறியப்படாமலே போய்விட்டன. ஆங்கிலத்தில் ‘UNSUNG HERO’ என்பதைப் போன்று இவர்கள் அதிகம் புகழ் பெறாத, கண்டுக்கொள்ளப்படாத தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான் மறைந்த பாரதப் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி. காந்தியைக் கொலை செய்த கோட்சேவை அறிந்தவர்களை விட காந்தியக் கொள்கைகளை இறுதி மூச்சு வரை வேதமாக கடைப்பிடித்த சாஸ்திரியை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவரின் படாடோபமற்ற எளிய தோற்றமும் […]







