admin
admin's Latest Posts
வல்லவன் வாழ்வான்

“முதலில் அமெரிக்கா”! (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், […]
அமெரிக்கத் தேர்தல் நடைமுறை

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்த பகுதியில் விளக்குகிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்

சமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,
ஹாப்பி பர்த்டே!! சித் ஸ்ரீராம்

பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாளையெட்டி (மே 19) அவரை பற்றி, அவரது பாடல்கள் பற்றி இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் சித் ஸ்ரீராம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு இசை சார்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்
சொர்க்கம் நேரிலே!

செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே! செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்! ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]
அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்

தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள் கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் […]
எது?

அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!! – முனைவர்சு. சத்தியா
இராசி பலன்

இராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்… தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல… ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும்? நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12ராசிகளையும் விடாம பாக்கறாளே…எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்…. அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 […]
என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால் பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்! என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]
கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]