கட்டுரை
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
ரசனை வசப்படுமா?

முன்பு எப்போதேனும் படம் பார்ப்போம். நமது அபிமான நடிகர் நடித்த படம் என்றால், எப்படி இருந்தாலும் பார்த்து விடுவோம். இல்லையென்றால், படம் நன்றாக இருக்கிறதென்று யாராவது சொன்னால் பார்த்துவிடுவோம். இல்லை, பொழுது போக்க வேண்டும் என்றிருந்து, படம் நல்லாயில்லை என்று சொன்னாலும், திரையரங்கு சென்று படம் பார்ப்போர் உண்டு. இருக்கும் திரையரங்குகளில் நான்கு படங்கள் ஓடும். அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு திரும்புவோம். செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல், தொலைகாட்சியில் படம் பார்ப்பது என்றால், […]
சமையல்.. சமையல்.. சமையல்..

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன. நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் […]
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope)

அமெரிக்க தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் (National Aeronautics and Space Administration NASA) மிகப் பாரிய விண்வெளி நோக்கும் இயந்திரம் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியாகும். இது பூமியிலிருந்து 1 மில்லியன் மைல்களுக்கு (930,000 miles/1.5 million kilometers) அப்பால், விண்வெளியில் இயங்கும் இந்த தொலைநோக்கி அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency ESA) மற்றும் கனேடிய விண்வெளி முகமை (Canadian Space Agency CSA) ஆகிய நிறுவனங்களின் கூட்டு […]
சர்தார் உத்தம்

சென்ற ஆண்டு 2021 அக்டோபரில் அமேசான் ப்ரைமில் வெளியான சர்தார் உத்தம் பற்றிய தாமதமான பதிவு இது. இந்தத் திரைப்படத்தை ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது என்பது சிரமமாகிப் போனது. ஆனால், ஒரு சிட்டிங்கில் பார்த்து முடிப்பது உசிதம். சில பேரின் வாழ்க்கை வரலாறு, கற்பனைக்கெட்டாதபடி இருக்கும். உத்தம் சிங்கின் வாழ்க்கையும் அப்படிபட்டது தான். நாம் அனைவரும் ஜாலியான்வாலா பாக் படுகொலை பற்றி அறிந்திருப்போம். பகத் சிங் குறித்து அறிந்திருப்போம். உத்தம் சிங் என்ற பெயர் தென்னிந்திய […]
பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி […]
(பேச்சு) சுதந்திர இந்தியா

இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் என்று சொல்வீர்களானால் உங்கள் வரலாற்றைத் திருத்திக் கொள்வது நலம். 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள், அதாவது திரு. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற தினத்தன்று தான், இந்தியா சுதந்திரம் பெற்றது. தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ராமசாமி முதலியார், ரோமேஷ் சந்தர் பட் , மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அனி பெசண்ட், […]
தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரையில் 2,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில், உயர் பள்ளி மாணவிகள் 2 பேரின் தற்கொலைக்குப் பிறகு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் […]
இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, […]
மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் […]