\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கதை

குழந்தை பெறாத தாய்

குழந்தை பெறாத தாய்

“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் […]

Continue Reading »

செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

கடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. “ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]

Continue Reading »

அவலங்கள்

அவலங்கள்

உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]

Continue Reading »

தாதுண் பறவை

தாதுண் பறவை

அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]

Continue Reading »

துறவு

துறவு

“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் […]

Continue Reading »

பாலு ஒரு நிலா

Filed in கதை, வார வெளியீடு by on September 28, 2020 0 Comments
பாலு ஒரு நிலா

“ஏன்னா…. என்ன பண்ணிண்ட்ருக்கேள்? டி.வி.மாட்டுக்கு ஓடிண்டு இருக்கு” புடவையின் முந்தானையால் நெற்றியில் மெலிதாய்த் தோன்றியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கணவனைக் கேட்டுக் கொண்டு, அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி.  “ஏண்டி… ஏன்… என்ன கேக்குற?“… ஒன்றும் புரியாதவனாய்த் தலையை உயர்த்தி, சற்றே சாய்த்து, ரீடிங்க் க்ளாஸ் மேல் கண்களை ஓட்டி, மனைவியைப் பார்த்தபடி கேட்டான் கணேஷ் ..டி.வி.யில் அன்றைய தினத் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அவனோ சோஃபாவில் அமர்ந்து லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான். தலையை […]

Continue Reading »

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2020 6 Comments
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

சேலத்திலிருந்து  வந்த தனியார்  பேருந்து பழனி பேருந்து நிலையத்தை  வந்தடைந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு, இராஜமாணிக்கமும்  கதிர்வேலனும் இறங்கினர். இருவர் தோள்களிலும் முதுகு பை   மற்றும் கைகளில் ஒரு பயணப்பை.  இருவருக்கும் ஐம்பது வயதிற்கு மேலிருக்கும்.  “என்னடா கதிர், நம்ப சேலம் பஸ் ஸ்டாண்ட் பரவாயில்ல போல!  ஓரே குப்பையா  இருக்கு பழனி பஸ் ஸ்டாண்டு!” “இறங்கி இன்னும் இரண்டு அடிக்கூட எடுத்து வைக்கல! அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சுட்டாயா? ஒரு நாளைக்கு பல ஆயிரம் […]

Continue Reading »

சூடு

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2020 0 Comments
சூடு

புகழினி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு நல்ல வரனைத்  தேடி கல்யாணத்தை முடித்து, தனது கடமையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாய் இறங்கி இருந்தார் அவளது  தந்தை சாமிநாதன்.  தினமும் தரகர்கள் தன் பையில் சில ஜாதகக்  கட்டுகளைச் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். மறுபக்கம் மகளுக்கு வாழ்க்கை துணையாக நல்ல குணம் படைத்த ஒருவன் அமைந்து விட வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவள் […]

Continue Reading »

எரிந்த பனைகள்

எரிந்த பனைகள்

‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது?  வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு  ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]

Continue Reading »

தெய்வமும் மனிதனாகலாம்

தெய்வமும் மனிதனாகலாம்

சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையைத் தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும், எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad