கதை
பனி விழும் மலர்வனம்

வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு […]
சவால்

“என்னது…? சைக்கிளோட்ட தெரியாதா?” தோழிகள் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சிதைந்து போனேன். நான்கு வீட்டுச் சாப்பாட்டையும் ரசித்து ருசித்துச் சாப்பிட்ட இனிய உணர்வு மனத்தைவிட்டு அகலுவதற்குள் ‘சைக்கிளோட்டலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியவளை மனத்துக்குள் திட்டித் தீர்த்தேன். உண்ட மயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ளாதவளை நொந்துகொள்வதா அல்லது அவள் கேட்டவுடன் குதித்துக்கொண்டு கிளம்பியவர்களைக் குறை சொல்வதா என ஒன்றும் புரியவில்லை. பிள்ளைகள் அனைவரும் சாப்பிட்டவுடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அரட்டைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்ட அந்த நாள் என்னளவில் […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2 குருசாமி, ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார். “சார், மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!” என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன். “என்னையா, எப்பவும் வீட்டுக்கு போற நேரத்தில, வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1 இரண்டு வாரங்கள் ஓடியது. ராஜீவ் மற்றுமொரு ஹை ஃப்ரொபைல் வழக்கைப் பார்த்து கொண்டிருந்தாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், சுந்தர் வழக்கில் தனது விசாரணையைத் தொடர்ந்தார். குருசாமி விசாரித்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். சுந்தரின் அலுவலகத்துக்குச் சென்று அவனது நண்பர்கள், அவனது மூத்த அதிகாரிகள் என்று ஒருவரைக் கூட விடாமல் விசாரித்தார். ராஜேந்திரன் அந்த ஏரியாவில் உள்ள ரவுடி, மற்றும் சில சந்தேகப் பேர்வழிகளிடமும் விசாரணை […]
கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை

‘கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை’, இது என்னப்பா பேர் புதுசா இருக்கேன்னு தோணுதுல்ல? எனக்கும் அந்த டவுட் வந்தது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நகரில் ஜவுளிக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. சிறிய கடைகள் முதல் பிரமாண்டமான பல அடுக்கு மாளிகைகளை உள்ளடக்கிய ஜவுளிக்கடைகள் இந்த நகரில் நிரம்பி வழியும். அதிலும் சென்னை தியாகராயநகரில் அமைந்திருக்கும் ரங்கநாதன் தெரு இதற்கு மிகப் பிரசித்தம். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டிப் போடுவது என்று சொன்னால் புரசைவாக்கம் தான். வேறு எங்கிலும் மக்கள் கூட்டத்தை […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1

பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம் சென்னை நகரத்தில் நடக்கும் குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம் தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். ***** திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின் குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே […]
திருமதி. ‘ஆகாச’ வேணி

2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….

2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஒரு விசித்திரமான கனவு

அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் […]
உயரம்

“என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..” இருவருக்கென போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான். “வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …” “ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “ ” ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..” ” நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு […]