\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

Squid game

Squid game

திரைப்படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் ஓடிடி வெப்சீரிஸ்கள் பெறத் தொடங்கி இப்போது பல நாட்களாகி விட்டது. சமீபத்தில் அப்படிப் பலமான வரவேற்பைப் பெற்ற வெப்சீரிஸ், செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ”ஸ்க்யூட் கேம்” (Squid game) ஆகும். இது ஒரு கொரியன் சீரிஸ். முழுக்க முழுக்கக் கொரியர்கள் தயாரிப்பில், படமாக்கத்தில், நடிப்பில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க வெளியிடப்பட்டுள்ளது. அதனால் யார் நடித்திருக்கிறார், இயக்கியிருக்கிறார் என ஜில் ஜங் ஜக் என்றெல்லாம் சொல்லி, உங்கள் வாய்க்கு […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள்

காற்றில் உலவும் கீதங்கள்

ரொம்பக் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘காற்றில் உலவும் கீதங்கள்’ பகுதியுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. 2020 மார்ச் மாதம் இதன் சென்ற பகுதி வெளிவந்தது. கொரோனா அறிமுகமாகி எல்லோருக்கும் பீதியைக் கிளப்பி, மொத்த ஊரையும் மூடத் தொடங்கிய சமயம் அது. அதன் பிறகு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள், பாடல்கள் வெளியாகாமல் மூடங்கிப்போனது.   ‘பாக்கு வெத்தல’  திரையரங்குகள் மூடத் தொடங்கிய அந்த இறுதி வாரத்தில் ‘தாராள பிரபு’ வெளியாகி இருந்தது. வெளிவந்த வேகத்தில் தியேட்டர்கள் […]

Continue Reading »

LED LIGHTS

LED LIGHTS

நிலவைக் கண்காணிக்க சூரியன் நியமித்த சீலிப்பர் செல்கள்! இரவில் ஒமிழும் வெளிச்ச கூடுகள்! வண்ணத்துப்பூச்சிகளும் தேனிக்களும் சீருடை அணிந்து இரவு வேலைக்குத் தயாராகின்றன மதி குழம்பி!! பூக்கள் மொட்டு மலர தயக்கம் காட்டி மவுனம் காக்கின்றன!! நிலவு அவசரமாய் அறிவிக்க போகிறது இனி பகலிலும் தடை இன்றி ஒளிருவதாய்!’ மனிதர்கள் இரவைப் பகலாக்கி இன்பம் காண்பதாய் நினைத்து கொண்டு – உறவை வீணாக்கித் துன்பம் காண்கிறார்களோ இச்செயற்கை ஒளியில்?   – இளங்கோ சித்தன்

Continue Reading »

வீரபத்திரர் மடை

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
வீரபத்திரர் மடை

அறுபத்தைந்து வயதுக் கட்டைப் பிரமச்சாரி அவர். அழுக்குப் படிந்த வெற்றுத் தேகம், இறுக்கக் கட்டிய சாரம் கழுத்தில் ஒரு அழுக்குப் படிந்த துவாய், ஏறிய நெற்றி, நரைத்துப் போன பரட்டைத் தலை, சற்றுக் குழி விழுந்த கன்னங்கள், விசுக்கு விசுக்கென்று கைகளை வீசியபடி நடக்கும் வேக நடை, இதுவே இவரின் இன்றைய அடையாளங்கள்.  மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னதும் தங்கத்தின் கண்களில் இருந்து நீர் முட்டிமோதி வெளியே வந்தது. இந்த அறுபது ஆண்டுகளில் […]

Continue Reading »

சபிக்கப்பட்டவர்களின் கனவு!

சபிக்கப்பட்டவர்களின் கனவு!

எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது.  மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்படுகின்றன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த ஒரு பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் […]

Continue Reading »

சந்தியாகாலம்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
சந்தியாகாலம்

🌿  அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது.  “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்” என்றதும்   மருண்டு கலவரப்பட்டான்.  அநேகமாக  அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள்,  அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன்  ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான். “அப்படியா சந்தோஷம் . . . . ! ”  “என்னடா  […]

Continue Reading »

நூறுரூபாய் தாள்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
நூறுரூபாய் தாள்

“இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்  திட்டுவா.  அடேய்… சொந்தக்காரனுங்களா… தயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடா… யாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். […]

Continue Reading »

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

வேளாண் துறை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் இந்த மசோதாக்களுக்கு 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்த பின்னர் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020 இதன் படி […]

Continue Reading »

சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

“என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர்.   அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய முனைவர் தி. […]

Continue Reading »

175 தமிழ்ப்  புத்தகங்கள் வெளியீட்டு விழா –  அட்லாண்டாவில்  இளம் எழுத்தாளர்கள் சாதனை!

175 தமிழ்ப்  புத்தகங்கள் வெளியீட்டு விழா –  அட்லாண்டாவில்  இளம் எழுத்தாளர்கள் சாதனை!

வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியது போல் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamilezhudhapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad