Archive for May, 2013
வ(ச)ந்த காலம் மாற்றம்
நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக் கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.
அன்னையர் தினக் கவிதை
கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்
வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்
யாக்கை நிலையாமை
பகலவன் எழுந்தாட
பனித்துளி பறந்தது
புள்ளினம் இசைபாட
புதுதினம் உதித்தது
கடிகாரம் வசைபாட
கனவு கலைந்தது
கலாம்
அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்! அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்! அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்! அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்! அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்! அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்! அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்! அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்! கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்! கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம் களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்! கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்! கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்! கன்னித்தமிழ் கற்கலாம் […]
மாதத்தின் மாமனிதர் – மேதகு ஜவகர்லால் நேரு
மே மாதத்தின் மாமனிதராக யாரை நினைவு படுத்தலாம் என்று ஆராய்ந்த பொழுது தமிழினத்தையும் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பாக எழுதி இருக்கும் அவரை நினைவு கூர்தல் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரி, அவர் சார்ந்த கட்சிக்கு கொள்கை இல்லை என்றாலும் நேர்மையான பொதுவுடைமைக் கொள்கையையும் நியாயமான கூட்டாட்சி கோட்பாட்டையும் முன்மொழிந்தார், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்தது வேறு விடயம். 542 பிரதானச் சிற்றரசுகளையும் பகுதிகளையும் உள்ளடக்கி தங்களின் மொழி, […]
வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …
நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் … போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ […]
யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)
யாழ்ப்பாணத்துத் தமிழற்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு. தேவையானவை ½ lbs மீன் ½ lbs கணவாய் ½ lbs இறால் ½ lbs சிறிய சிங்க இறால்/crawfish ¼ lbs பயிற்றங்காய் ¼ lbs மரவள்ளிக்கிழங்கு ¼ lbs பலாக்கொட்டை ¼ lbs முழக்கீரை/spinach 3 மேசைக்கரண்டி அரிசி ¼ கோப்பை/cup உலர்ந்த […]
கவிஞர் அறிவுமதி
சரிகை வேட்டியில்லை, பட்டுத் துண்டுமில்லை, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியில்லை, மொகலாய மன்னர்கள் அணியும் காலணியி்ல்லை, மொத்தத்தில் திரைப்படப் பாடலாசிரியர்/கவிஞர் என்றவுடன் நாம் வழக்கமாகக் கற்பனை செய்து கொள்ளும் உருவம் எதுவுமில்லை, ஆனால் தரமான பாடல்கள் பல எழுதி, தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பைப் பல வகையிலும் தந்தவர். பாரதிராஜா தொடங்கி, இளையராஜா வரை பல ஜாம்பவான்களுடனும் பணி செய்து, அந்த இணைப்புகளைத் தனது வாழ்க்கையின் உயர்வுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் […]
எசப்பாட்டு
எசப்பாட்டு என்பது ஒரு கருத்தினை விவாதிப்பது போல இரு தரப்பினர் பாடும் பாடல் வடிவம். மிகப் பழமையான பாடல் முறைகளில் இதுவும் ஒன்று. கிராமப்புறங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும், கடுமையான வேலை செய்பவர்களும் உடல் அசதி தெரியாமல் இருக்க இவ்வகை பாடல்களைப் பாடுவார்கள். ஒருவர் பாடலின் ஒரு பகுதியைப் பாடியதும், அதற்குப் பதிலளிப்பது போல ஏளனம் செய்தோ, பதில் கொடுக்கும் வகையிலோ மற்றவர்கள் பாடுவார்கள். லாவணி பாடல் என்பதும் எசப்பாட்டின் ஒரு வகை. திரைப்பாடல்களிலும் இது கையாளப்பட்டிருக்கிறது. […]