Archive for May, 2013
காந்தர்வக் குரலோன்

இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார், தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை […]
காதல்

சிந்தும் மழைத்துளி போலே சந்தம் பொழியுது உள்ளே எதிலும் அழகைக் கண்டேன் மண்மேலே காணும் கனவுகள் மெல்ல வானம் தழுவுது இங்கே நெஞ்சம் நிறைகிறதின்பம் தன்னாலே பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும் கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும் மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும் சரணம் 1 விண்ணோடு மேகம் வந்தாடும் நேரம் மண்ணோடு வாசம் என்மீது வீசும் கண்ணோடு […]
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படும். – பொய்யாமொழிப் புலவன் இந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க இயலுமோ? கனிவான உருவம், களையான முகம், கூர்மையான கண்கள், குழந்தைச் சிரிப்பு, நெற்றியில் புரளும் கவனமாக வளைத்து விட்ட வெளிர் முடி, எளிமையும் சிறப்பையும் ஒருங்கே காட்டும் அழகான உடை, 82 […]
வித்தியாசம் என்ன?

சற்றுப் பொறுங்கள்… நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படங்களும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை படைப்புகளும் இதோ: இவ்விடம் வித்தியாசத்தைப் பாருங்கள்
அகர வரிசையில் அழகிய மினசோட்டா

அகரவரிசையில்அழகிய மினசோட்டா ஈ – ஈலீ Ely MN, மினசோட்டாவின் வடமேற்கில் மாகாணத்தின் பெரிய செயின்லூவிஸ் மாவட்டத்தில்அமைந்துள்ளது – இவ்விடம் BWCA எனப்படும் கைத்தோணி (Canoe) ஏரிக்கரைக்கு அருகாமையிலும் 3 மில்லியன் ஏக்கர் சுப்பீரியர் காட்டையும் எல்லையாகக் கொண்டது. இவ்விடம் பிரதான உல்லாசப்பயணிகள் பார்வைக்கு தேசத்தின் பிரதான ஓநாய்ப் பாதுகாப்பு, பராமரிப்பு ஆராய்ச்சிக் கூடம் மேலும் காட்டில் மான், மரை, மற்றும் கறுப்புக் கரடி, கழுகு, மற்றும் நீர்ப்பறவைகளையும் காணக்கூடியவைகளாக உள்ளன. இயற்கையாக ஒன்றுடன் ஒன்று என […]
பொருளுடன் திருக்குறள் – அந்தாதி வடிவில்

குறள் பொருள் வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (861) நம்மிலும் வலிய பகைவரை எதிர்ப்பதைத் தவிர்த்து; நம்மிலும் மெலியரை உடனே எதிர்த்துச் செல்க. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (146) பிறர் மனை நோக்குபவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (571) அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் கொண்டவர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் […]
வண்ணம் தீட்டுக

சற்றுப் பொறுங்கள்… நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படங்களும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை படைப்புகளும் இதோ: இவ்விடம் தொடர்ந்து வண்ணம் தீட்டுங்கள்
ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) […]