Archive for August, 2013
இசையுலக இழப்புகள்
இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]
கோடைக்கால காய்கறி விருந்து
கோடைக்காலத்தில் உழவர் சந்தைகள் மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் மாநகரங்களிலும் பல்வேறு சுற்றுப்புற நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் புதிதாய் மலர்ந்த பூக்கள், புதிய காய்கறிகள், பழங்கள், துளிர் கீரைவகைகள், விதவிதமான கிழங்குங்கள், பூசனிகள் , பால், வெண்ணெய், முட்டை, தேன் போன்றவை இந்த சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் காய்கறிகளிலும் மற்றைய பொருட்களிலும் இரசாயனக் கலவை பூசப்படுவதில்லை. பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை நீண்ட நாள் […]
லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, வால்நட் க்ரோவ், மினசோட்டா.
ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறிய காலகட்டத்தில் இந்த வட கண்டத்தில் வெவ்வேறு பாகங்களிலே பலவாறான காலச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையமைத்து கொள்ள வேண்டியிருந்தது . மினசோட்டா மாநிலத்தைப் பொறுத்தளவில் நோர்வே நாட்டவர் வந்து குடியேறியதையும் அப்போது நடந்த உண்மை சம்பவங்களைப் பற்றியும் வெகு எளிமையான முறையில் சொல்லப்பட்ட கதை லோரா ஏங்கள் வைல்டர் அம்மையாரின் Little House On the Prairie ஆகும். இந்தப்புத்தகம் 1970களில் தொலைகாட்சி தொடராக தயாரிக்கப்பட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு தாய், […]
ஓய்வு
”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்” தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும் தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் […]
வாலி
வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று! சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று? விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம் விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை? தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்! மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்! அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்! ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே! மெய்யென்று மேனியை யார் சொன்னது? மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் […]
கனவு மெய்ப்பட வேண்டாம்
பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ். “எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா. செக்கை வாங்கிப் பார்த்தான். “யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் […]
நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா
தமிழ்நாட்டில், ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த நீலமேகம், தினமலர் பத்திரிகை ஏஜெண்டாக இருந்து வருபவர். இவர் பேப்பர் விநியோகித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் கிடந்த ஒரு பையில் ரூ. ஒரு இலட்சத்து 53 ஆயிரத்தை கண்டெடுத்தார். உடனே ஜெயங்கொண்டம் போலீஸில் பணத்தை ஒப்படைத்தார். பின்னர் பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. இதற்காக நீலமேகத்தின் நேர்மையை பாராட்டும் வகையில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, விழா ஒன்றை நடத்தியது. கல்லூரியின் தாளாளர் க. செங்குட்டுவன் அவர்கள் […]
பெஃட்னா 2013 – ரொரோன்டோ தமிழ் விழாவில் மினசோட்டாவின் பங்களிப்பு
வட அமெரிக்காவில் தமிழ்ச் சமுதாயத்தின் செழிப்பும் அதன் தற்கால பிரதிபலிப்பும் சென்ற July 5-6-7 களில் கனேடிய ரொரோன்டோ மாநகரில் நடைபெற்ற குதூகல விழாவில் நன்றாகவே தென்பட்டது. தமிழ்தாயகங்களில் மேலை நாட்டு மோகம் ததும்பும் பொழுதும் தாயக தமிழ் மேதைகளும், வட அமெரிக்கத் தமிழன்பர்களும், தவ்வல்களும் கலாச்சார அடிப்படையில் ஒருங்கிணைந்து தத்தம் ஆற்றலை பகிர்ந்து கொண்டு தமிழ்த் தேன் மழையில் நனைய வைத்தார்கள். மினசோட்டா தமிழ்ச்சங்கம் பங்கேற்பு இந்த விழாவில் குறிப்பாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தாரும், தமிழ்ப் […]
நட்பு
உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக் கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப் பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ! இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!! – மதுசூதனன் வெ. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில் அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்! அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில் அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்! – ரவிக்குமார் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ […]