Archive for May, 2014
நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்
பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் […]
எசப்பாட்டு – உயிர்
அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து
முப்பரிமாண அச்சுக்கலை
“ஆண்ட்டி … ராகுல் இல்லையா?” “வாடா .. அவன் வீட்ல இல்லையே …” “எங்க போயிருக்கான்?” “அவனுக்குப் போன மாசம் மோட்டார் சைக்கிள் ஆக்சிடெண்ட்ல காது துண்டாகி விழுந்துடுச்சி இல்ல? அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆர்டர் செஞ்சிருந்தான் .. அது ரெடியாயிடுச்சின்னு இன்னைக்குக் காலைல ஃபோன் பண்ணியிருந்தாங்க … அதான் போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வரப் போயிருக்கான் ..” “அப்படியா .. எங்க ஆர்டர் பண்ணியிருந்தான்? “ “இங்க தான் செயின்ட். பிரான்சிஸ்ல …” “அய்யோ அங்க ஏன் […]
முதுமை
காலையில் முன்னெழுந்து கடவுளரைத் துதிபாடி
கால்நடுங்க நடைநடந்தே கடைத்தெரு வந்தவரின்
காட்சியினை நான்காண கண்களது குளமாகும்
காரணம் தேடுகின்றேன், கணக்கெதுவும் விளங்கவில்லை!!
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!!! பொட்டிலடித்தாற் போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-6
(பகுதி 5) புதிய காலநிலை புலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, புவியியல் தரைத்தோற்றம், சுற்றாடல் என்பன எமது தேசத்தில் இருந்து சென்றவர்களைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர்களின் கவிதைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. புதிய இடம், குளிர் சூழ்ந்த காலநிலை என்பன ஒருங்கு சேர்ந்து அவர்களை மிகவும் பாதித்துள்ளன. “இரவுகள் துயில்கொள்ளா!” என்ற கவிதையில் நார்வே நாட்டின் நீண்ட இரவு கவிஞருக்குப் புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருள் சூழ்ந்த அகதி வாழ்வுக்கு அர்த்தம் சொல்வதாகவும் அமைகின்றது. […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2
பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள்(12 Angry Men) இந்த இதழில் பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள் (12 angry men) என்ற நாடக வகையைச் சேர்ந்த ஆங்கிலத் திரைப்படத்தைப் பற்றி பார்ப்போம். இந்த திரைப்படம் யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தினரால் ஏப்ரல் 04 1957ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தயாரித்தவர்கள ஹென்றி ஃபொண்டா மற்றும் ரெஜினால்ட் ரோஸ். போன அத்தியாயத்தில் நாம நிலாவிற்கு சென்று வந்த கதையைப் பார்த்தோம். இந்த படம் ஒரே அறைக்குள் நடக்கின்ற கதை. இயக்குநர் பாசு […]
வயற்காற்று (பாகம் – 02)
வயற்காற்று (பாகம் – 01) காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள். “பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…” “விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…” “ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே” “இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…” […]