Archive for March, 2016
நிறமற்ற சினிமா
படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]
சுறா மீன் கறி
மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம். ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் […]
இணையச் சுழல்….
இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் […]
சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்
வட அமெரிக்கக் கண்டமும் மெதுவாக இளவெனிலை நோக்கி நடையெடுக்கிறது. இந்தத் தருணத்தில் சக்கரைக் கிழங்குச் செடியை எவ்வாறு நமது யன்னலோரத்தில் வளர்க்கலாம் என்று பார்ப்போம். தேவையானவை நீண்ட நீர் குடிக்கும் கண்ணாடிக் குவளை/Water glass அல்லது பூ வைக்கும் சாடி பெரிய நீளமான சக்கரைக் கிழங்கு ஒன்று பற்குத்தி (Toothpick), அல்லது சான்விச் குச்சிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் (Bamboo skewers) சாதாரண வீட்டுக் குழாய்த்தண்ணீர் சக்கரைக் கிழங்கான மரக்கறி, மளிகை வாங்கும் கடைகளில் மிகவும் சொற்ப […]
வேலையில்லாப் பட்டதாரி !
நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !
தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
மறதிக்குப் பின் வருவதே மரணம்
படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
மனிதனாக இரு !
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். இது தேர்தல்களின் நேரம். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட சபைக்கான தேர்தல் தெருவெங்கும் முழக்கமிடத் தொடங்கியுள்ளது. இரண்டையும் கூர்ந்து கவனிக்கும் நமக்குச் சில விஷயங்கள் தெளிவாக விளங்குகின்றன. எந்த ஊரானாலும், எந்த நாடானாலும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் செய்கைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அரசியல்வாதிகளின் குணங்களிலும் பெருமளவு ஒற்றுமையைக் காண முடிகிறது. பொது வாழ்வில் நாகரிகம் என்பது எல்லா இடங்களிலுமே குறைந்து வருகிறது என்பதும் இன்றைய மேடைப் பேச்சுக்களைப் […]