Archive for February, 2018
ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ
சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]
ஜிடிபிஆருக்கு தயாரா?
தகவல் தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]
மன்மதனே …!!
தாவணிக் கனவுகளில் மனதில் நுழைந்தவனே தலையிலே பூச்சூட்டி எனையாட் கொண்டவனே தனிமையில் தளர்ந்த தருணத்தில் உயிர்த்தவனே தந்திரத்தால் மனதில் தஞ்சம் அடைந்தவனே..! மேகக் கூந்தலில் விரலால் கோதியவனே மேனியில் வேதியியல் மாற்றம் செய்தவனே வேதனையின் வேஷம் தனைக் களைத்து வேந்தனாய் மாறி எனை ஆள்பவனே …! வயக்காட்டில் வம்பு செய்த மன்னவனே வரப்பில் அத்துமீறி வரம்பு மீறியவனே வயலில் செங்கமலமாய்ப் பூத்தவளை வஞ்சனையால் மயக்கி மஞ்சத்தில் சாய்த்தவனே…! காதலில் எனைக் […]
குளிரில் வெப்பக் காற்று பலூன் பயணம் 2018
குளிர்காலம் என்றாலே நமக்கு நினைவு வருவது மங்கி குல்லா, கம்பளி போர்வை ஆனால் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தில் ஹட்ஸன் என்ற நகரில், குளிர்காலத்தில், வெப்பக் காற்று பலூன் நிகழ்வை 29 ஆவது வருடமாக நடத்துகிறார்கள். ஜனவரி மாதக் கடைசியில் இரு தின விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவ்விழாவில் உள்ளுர் வியாபார நிறுவனங்களின் கண்காட்சியும், தள்ளுபடி விற்பனையும் இடம்பெற்றிருந்தது. இது போக காற்று பலூனின் இயந்திரத்தை மட்டும் பள்ளி மைதானத்தில் வைத்து அதன் செயல்முறை விளக்கத்தை அளித்தனர். […]
நினைவின் மொழி
“மனோ, நியூ இயர் அன்னைக்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு. அவசியம் வந்துரணும், கடைசி நேரத்துல வேற எதுவும் காரணம் சொல்ல கூடாது” “சேச்சே.. கண்டிப்பா வரேன், நண்பா. நமக்கு சோறு தான் முக்கியம்.” அன்பான உபசரிப்பும், ருசியான உணவும் கொண்ட விருந்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருதோம். அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், புளோரிடா, நெவாடா, லாஸ் வேகாஸ், நியூ யார்க் என ஒட்டியிருந்த காந்த பட்டைகளைப் பற்றி விசாரித்தேன். இது எல்லாம் அந்தந்த ஊருக்கு சென்று வருகையில் […]
பத்மாவத் – திரை விமர்சனம்
மதம் – அரசியல் – சினிமா, இம்மூன்றும் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் ஒரு பெரும் தொடர்போடு செயல்பட்டு வருகிறது. அது இந்த ‘பத்மாவத்’ திரைப்படத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பிரமாண்ட இதிகாசப் படங்களுக்குப் புகழ் பெற்ற ஹிந்திப் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்த முறை கையில் எடுத்துக் கொண்டது, ராஜபுத்திர ராணியான பத்மாவதி பற்றி பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜயாஸி என்னும் கவிஞர் எழுதிய ‘பத்மாவத்’ இதிகாசப் படைப்பை. ராணி […]
செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா
1885 ஆம் ஆண்டு ஒரு நியூயார்க் பத்திரிக்கையில் செயிண்ட் பாலை (Saint Paul) குளிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டு எழுதியிருந்தாராம். உடனே ரோஷம் கொண்ட செயிண்ட் பால் மக்கள் வாழ்வதற்கான தகுதி மட்டும் அல்ல, கொண்டாட்டத்திற்கும் இது ஏற்ற இடம் எனச் சூளுரைத்துத்தொடங்கியது தான் இந்தச் செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா (Saint Paul Winter Carnival). 1886 இல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழா, இரண்டாம் உலகம் […]
சூப்பர் போல் லைவ்
மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர். தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் […]
எதிர்பாராதது…!? (பாகம் 10)
( * பாகம் 9 * ) பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் இடம் மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான். உள்ளுக்குள் மெலிசாக உதறல். ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் […]