
இலக்கியம்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.! – நாலடியார் பாடல்
வித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி சிறுவர் பகுதிக்குச் செல்ல இவ்விடம் சொடுக்கவும். வாசுகி வாத்தும் நண்பர்களும் இவ்விடம் சொடுக்கவும்.
பனிப்பூக்கள் சஞ்சிகை தனது பத்தாம் ஆண்டைக் கொண்டாடுகின்றது. இவ்விடம் புதிய அம்சங்கள் வரவுள்ளன. பூக்களின் Podcast, போட்டிகள், நேர்முகங்காணல்கள், அமெரிக்க சமூகவியல் கட்டுரைகள் என பல விதமான பகுதிகள் உங்களுக்காகத் தந்துள்ளோம். இத்துடன் மினசோட்டா மாணவர் பதிப்பாளர் திட்டமும் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும்.
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்
புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்
சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன், சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம். போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் […]
பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்
சந்தர்ப்பம், சூழல், தொழிநுட்ப நவீனங்கள் எமது வாழ்வைத் தொடர்ந்தும் மாற்றியவாறே உள்ளன என்பதை நாம் அறிவோம். மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்திற்கு உரியன என்று கூறிக்கொள்ள முடியாது. இதை நாம் படிக்கும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்று எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவிற்கு வரும். சென்ற பலவருடங்கள் அச்சுத்தாளில் தயாரிக்கப் பட்டு காகித வாசிப்பில் இருந்து கணனி உபகரணங்களில் desktop, notebook இருந்து இன்று பலவித கைத் தொலைபேசி smart phone, தட்டு ஏடுகள் Tables கொண்ட இலத்திரனியல் […]
இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்
கடந்த இரண்டாண்டுகளாக நோய்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த உலகநாடுகள், அப்பிடியில் லேசானத் தளர்வு ஏற்பட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனைந்த வேளையில் வேறுவடிவிலான சிக்கலுக்குள் சரியத் தொடங்கியுள்ளன. இம்முறை உலகை அச்சுறுத்துவது போர் மற்றும் பொருளாதார நெருக்கடி. ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான போர் நடவடிக்கைகளால் சில நாடுகள் வீழ்ச்சியுற, பொருளாதார ஸ்திரமின்மையால் சில சிறிய நாடுகள் பேரின்னல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடவேண்டியவை இலங்கையும், பாகிஸ்தானும். இலங்கை இலங்கையின் நெருக்கடிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் 3T […]
ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)
“ஒரு மொழி உலகளாவிய மொழியாக மாறுவது அதைப் பேசும் மக்களின் சக்தியால்” – இதைச் சொன்னவர், பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மொழியியலாளர் டேவிட் கிரிஸ்டல். உலகெங்கும் சுமார் 7100 மொழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், தனித்தன்மையோடு, வெவ்வேறு பரிமாணங்களில், மனிதச் சமூகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பல மொழிகள், அவை புழங்கப்படும் பூகோள எல்லையைக் கடந்து பிரபலமடையவில்லை. எனினும் சில மொழிகள் எல்லைகளை உடைத்து மிகப் பரவலாகப் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆங்கிலம். ஐந்தாம் நூற்றாண்டில், […]
(Indian Association of Minnesota) IAMன் இந்திய மக்கள் சந்திப்பு 2022
IAMன் இந்திய மக்கள் சந்திப்பு கடந்த மாதம் மார்ச் 19 2022 அன்று மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னெடுங்கா (Minnetonka) உள்ள சமூக மன்றத்தில் சமூக மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு இந்திய அமைப்பு நிறுவனத்தின் பிரமுகர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பு நிறுவனத்தின் உள்ள பிரமுகர்களும், மினசோட்டா மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்ட உள்ளூர் அரசியல் (elected officials) பிரமுகர்களும் மெலிசா ஹோர்ட்மன் (Melissa Hortman), ஜின்னி க்ளெவோர்ன் (Ginny Klevorn), கிறிஸ்டின் பஹனீர்(Kristin Bahner), ரியான் […]
பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]
காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022
கண் விழித்து நான் எழுந்தேன்…. கனவின் நங்கை கண் முன்னே! கிள்ளி எனை நான் உணர்ந்து காண்பது நனவென உறுதி செய்தேன்! கன்னியவள் அருகே கனிவுடனே வந்து கவனத்தை நெருடி காதலுடன் பருகி கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்! காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்! காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்! நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, நாசமிகு […]
நிலவைக் கண்காணிக்க சூரியன் நியமித்த சீலிப்பர் செல்கள்! இரவில் ஒமிழும் வெளிச்ச கூடுகள்! வண்ணத்துப்பூச்சிகளும் தேனிக்களும் சீருடை அணிந்து இரவு வேலைக்குத் தயாராகின்றன மதி குழம்பி!! பூக்கள் மொட்டு மலர தயக்கம் காட்டி மவுனம் காக்கின்றன!! நிலவு அவசரமாய் அறிவிக்க போகிறது இனி பகலிலும் தடை இன்றி ஒளிருவதாய்!’ மனிதர்கள் இரவைப் பகலாக்கி இன்பம் காண்பதாய் நினைத்து கொண்டு – உறவை வீணாக்கித் துன்பம் காண்கிறார்களோ இச்செயற்கை ஒளியில்? – இளங்கோ சித்தன்
எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்படுகின்றன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த ஒரு பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் […]
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன. நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் […]
பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்
சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன், சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம். போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் […]
(Indian Association of Minnesota) IAMன் இந்திய மக்கள் சந்திப்பு 2022
IAMன் இந்திய மக்கள் சந்திப்பு கடந்த மாதம் மார்ச் 19 2022 அன்று மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னெடுங்கா (Minnetonka) உள்ள சமூக மன்றத்தில் சமூக மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு இந்திய அமைப்பு நிறுவனத்தின் பிரமுகர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பு நிறுவனத்தின் உள்ள பிரமுகர்களும், மினசோட்டா மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்ட உள்ளூர் அரசியல் (elected officials) பிரமுகர்களும் மெலிசா ஹோர்ட்மன் (Melissa Hortman), ஜின்னி க்ளெவோர்ன் (Ginny Klevorn), கிறிஸ்டின் பஹனீர்(Kristin Bahner), ரியான் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2022
‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். கடந்த பல வருடங்களாக மார்ச் 17ஆம் தேதி இந்த செயிண்ட் பாட்ரிக்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பல தினங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து இந்த விழாவைச் சிறப்பித்தனர். ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ தினத்தன்று நகரில் பல இடங்களில், மக்கள் பச்சைப் பசேலென்று உடைகள் அணிந்தும், பச்சை நிற அலங்காரப் பொருட்களைக் காட்சிப்படுத்தியபடியும் மிகவும் […]
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘மிலன் மந்திர்’ இல் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று ஹோலி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டம் குறித்த எங்களது முந்தைய ஆண்டு பதிவுகளை இங்கு காணலாம் : https://www.panippookkal.com/ithazh/archives/18284 ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஹோலித் திருவிழா இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவேண்டிய சூழல் மாறி, இப்பொழுது தான் வெளியே […]
தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது டப்பிங் செய்யப்பட்டுத் தமிழில் வெளியாகும் ஹிந்தி வெப் சீரிஸ்கள் தான். அவற்றில் கண்டெண்ட், மேக்கிங் என்று ஒரு நேர்த்தி இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் வெப் சீரிஸ் என்பது எண்ணிக்கையில் குறைவுதான். அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸ் என்பது மிகவும் குறைவு. ஆட்டோ சங்கர், நவம்பர் ஸ்டோரி, ட்ரிப்பிள்ஸ், புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள், நவரசா என முயற்சிகள் தொடர்ந்து அனைத்து பெரிய ஓடிடி தளங்களிலும் […]
இன்றைய இணைய உலகில் கொண்டாட்டங்களுக்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு மட்டும் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவதில்லை. படங்களுக்கும் ஆண்டுவிழா கொண்டாடுகிறார்கள். அப்படிச் சமீபத்தில் ”பூவே உனக்காக” படம் வெளியாகி 26 ஆண்டுகள் எனச் சில பதிவுகளைக் காண முடிந்தது. அப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நினைவுகள் வந்தன. அவ்வயதில் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தது நினைவுக்கு வந்தது. படத்தின் இறுதிகாட்சியில் விஜய் பேசும் வசனங்களுக்குத் திரையரங்கம் ஆர்பரித்தது நினைவுக்கு வந்தது. ஊருக்குள்ளே இவ்வளவு காதல் தோல்வி கேசுகள் […]
சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி
கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]
ஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு அருளப்பட்டதைக் கொண்டாடும் ஈகைத் திருநாளான “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் […]
இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்
சந்தர்ப்பம், சூழல், தொழிநுட்ப நவீனங்கள் எமது வாழ்வைத் தொடர்ந்தும் மாற்றியவாறே உள்ளன என்பதை நாம் அறிவோம். மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்திற்கு உரியன என்று கூறிக்கொள்ள முடியாது. இதை நாம் படிக்கும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்று எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவிற்கு வரும். சென்ற பலவருடங்கள் அச்சுத்தாளில் தயாரிக்கப் பட்டு காகித வாசிப்பில் இருந்து கணனி உபகரணங்களில் desktop, notebook இருந்து இன்று பலவித கைத் தொலைபேசி smart phone, தட்டு ஏடுகள் Tables கொண்ட இலத்திரனியல் […]
இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்
கடந்த இரண்டாண்டுகளாக நோய்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த உலகநாடுகள், அப்பிடியில் லேசானத் தளர்வு ஏற்பட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனைந்த வேளையில் வேறுவடிவிலான சிக்கலுக்குள் சரியத் தொடங்கியுள்ளன. இம்முறை உலகை அச்சுறுத்துவது போர் மற்றும் பொருளாதார நெருக்கடி. ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான போர் நடவடிக்கைகளால் சில நாடுகள் வீழ்ச்சியுற, பொருளாதார ஸ்திரமின்மையால் சில சிறிய நாடுகள் பேரின்னல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடவேண்டியவை இலங்கையும், பாகிஸ்தானும். இலங்கை இலங்கையின் நெருக்கடிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் 3T […]
ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)
“ஒரு மொழி உலகளாவிய மொழியாக மாறுவது அதைப் பேசும் மக்களின் சக்தியால்” – இதைச் சொன்னவர், பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மொழியியலாளர் டேவிட் கிரிஸ்டல். உலகெங்கும் சுமார் 7100 மொழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், தனித்தன்மையோடு, வெவ்வேறு பரிமாணங்களில், மனிதச் சமூகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பல மொழிகள், அவை புழங்கப்படும் பூகோள எல்லையைக் கடந்து பிரபலமடையவில்லை. எனினும் சில மொழிகள் எல்லைகளை உடைத்து மிகப் பரவலாகப் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆங்கிலம். ஐந்தாம் நூற்றாண்டில், […]
மினசோட்டாவில், மங்கு பனி ஓய்ந்திட, மாரி மழை பெய்திட பொங்கி வந்தது வசந்தகாலம். மரகதப் பச்சை இலைகள் ஒரு புறம். மஞ்சள், செம்மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, சிவப்பு, நாவல், என மலர்ந்திடும் பூக்கள் மறுபுறம். வெப்பவலயத்திலிருந்து வட அமெரிக்காவில் வந்து குடியேறி வாழும் தமிழர்கள் பலருக்கு ஆரம்பத்தில் வட அமெரிக்க காலநிலை சற்றுப் புதிராகவும் அல்லது கேள்விக் குறியாகவும் அமையலாம். குறிப்பாக, வீட்டின் பிந்தோட்டத்தில் தாவரங்கள், பூக்கள், மரங்கள் வளர்க்க விரும்புவோர்க்கு எப்போது, அவற்றை விதைப்பது […]
கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]
எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று மார்கழி மாதக் குளிரில் சற்றே நடுங்கி கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது. பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!! பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!! மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது […]
அறுபத்தைந்து வயதுக் கட்டைப் பிரமச்சாரி அவர். அழுக்குப் படிந்த வெற்றுத் தேகம், இறுக்கக் கட்டிய சாரம் கழுத்தில் ஒரு அழுக்குப் படிந்த துவாய், ஏறிய நெற்றி, நரைத்துப் போன பரட்டைத் தலை, சற்றுக் குழி விழுந்த கன்னங்கள், விசுக்கு விசுக்கென்று கைகளை வீசியபடி நடக்கும் வேக நடை, இதுவே இவரின் இன்றைய அடையாளங்கள். மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னதும் தங்கத்தின் கண்களில் இருந்து நீர் முட்டிமோதி வெளியே வந்தது. இந்த அறுபது ஆண்டுகளில் […]
🌿 அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது. “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்” என்றதும் மருண்டு கலவரப்பட்டான். அநேகமாக அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள், அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன் ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான். “அப்படியா சந்தோஷம் . . . . ! ” “என்னடா […]