admin
admin's Latest Posts
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் எங்களின் அடுத்த வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாத இதழை வெளியிடுகிறோம். இந்த மாதம் முதல் எங்களின் வெளியீட்டுத் திகதிகளைச் சற்று மாற்றி அமைக்கலாமெனத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை ஒவ்வொரு மாதமும் – நாங்கள் தொடங்கிய திகதியான – இருபத்தி ஒன்றாம் திகதி அன்று வெளியிட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழ் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மத்தியத் திட்ட நேரப்படி (Central Standard Time) இரவு நேரத்தில் […]
நெஞ்சு பொறுக்குதில்லையே
“நான் கொஞ்சம் கீழே வரைக்கும் போய்ட்டு நடந்துட்டு வரேன்” என்று கிளம்பினார் அம்புஜம். “தினம் இப்படி போய் நடக்க வேண்டியது அப்புறம் ராத்திரி முழுக்க மூட்டு வலின்னு முனக வேண்டியது. இதே வேலை உனக்கு” என்று சொல்லியபடி உள்ளே இருந்து வந்தார் சதாசிவம். “மூட்டு வலி ஒண்ணும் நடக்கறதால இல்ல. வயசாச்சு. இந்த மாசி வந்தா 63 வயசு ஆச்சு. மூட்டு வலி வராம என்ன?.. “ஆமாம் பாட்டி ஆகி ஆறு வருஷம் ஆச்சு. “கீழே போனா […]
இன்றைய தகவல் உலகில் நேற்றைய தகவல் முக்கியமா?
காலவரை என்னும் சொல் இயக்கத்தில் முடிவிலியான இன்றைய மின்னியல் நூற்றாண்டிலே ஒரு கேள்விக்குறியே. நேற்று, இன்று என்ற குணாதிசயங்கள் தகவல் அறிவியலில் தொடர்ந்தும் முக்கியத்துவம் வகிக்கின்றனவா என்று நாம் எடுத்துப்பார்க்கலாம். தொடர்ந்து இக்கட்டுரையில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் நூற்றாண்டு என்ற சொற்கள் ஒரே கருத்தைத்தான் குறிக்கும். அசலும் அதன் இலத்திரனியல் நிழல்களும் காலவரையானது படைக்க பட்ட அசல் பொருட்களைப் பெரும்பாலும் கொண்டு அமைந்த ஒரு சிந்தனை. ஒரு பொருளின் அசல் தன்மையானது அது உற்பத்தி செய்யப்பட்ட நாளில் […]
காத்திருப்பேன் நண்பரே!
காத்திருக்கிறேன் நண்பரே! மணி ஆறரை ஆகி விட்டது. என்றுமே தவறாமல் ஆறு மணிக்கெல்லாம் என்னுடன் பேச வரும் என்னுடைய ஆத்ம நண்பர் இன்று இன்னமும் வரவில்லை. முப்பது வருட நட்பு. தினமும் ஆறு முதல் எட்டு வரை என்னிடம் பேசுவார். அவர் தான் பேசுவார். நான் பொறுமையாகக் கேட்பேன். அவர் வீட்டைத் தாண்டி எவர் சென்றாலும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேசுவார். எல்லா விஷயங்களும் அவருடையப் பேச்சில் இருக்கும். அதனால் அவரின் நண்பர்கள் சரித்திரமும் எனக்குப் […]
பூவே… பனிப்பூவே…
இலக்கியத்தென்றல்வீசும்,
இனியச்சாளரம்
எங்கள்பனிப்பூக்கள்….
பண்பாடும்கலாச்சாரமும்,
பாடங்களில்மட்டுமேகாணாமல்,
பார்வைக்குக்கொண்டுவந்து
பாரோரைப்பார்க்கவைத்தது,
இப்பனிப்பூக்கள்….
எரிபொருட்கல சாலையூர்திகள் (Fuel-Cell Vehicles – FCVs) மெய்மை
தற்காலமாகிய இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் பயணியூர்திகள் எரிபொருட்கலங்களை வைத்து ஓடும் என்றால் யாவரும் சகசமாக நம்பக்கூடிய விடயம். காரணம் நாம் ஏற்கனவே சாலையில் புதிய ஃபோட் (Ford) , டொயோட்டா (Toyota), ஹொண்டா (Honda) போன்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து கலப்பின (hybrid) வாகனங்கள் பாதி நில எண்ணெய் பாதி எரிபொருட்சேமிப்புக்கலங்கள் கூடிய வாகனங்களை ஓட்டுவதும், இல்லை தெரிந்தவர்கள் ஓட்டுவதை அவதானித்துள்ளமையே. எரிபொருட்கலங்கள் சாதாரண விடயமாக தற்போதைய தலைமுறை நினைப்பினும் இந்த முன்னேற்றம் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேல் […]
எசப்பாட்டு – நடிகன்
எவனோ கதையெழுத எவனோ படமெடுக்க எவனோ கவியெழுத எவனோ இசையமைக்க எவனோ பாடிவைக்க எவனோ ஆடவைக்க எவனோ எழில்கொடுக்க எவனோ உடையமைக்க
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-5
(பகுதி 4) இன-நிறவெறித் தாக்கம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற அனேகமான நாடுகள் வெள்ளையர்களினால் ஆளப்படுபவை. இந்நிலையில் இன-நிற அடிப்படையிலான பாகுபாடுகள், அதனால் வெளிப்படுகின்ற தாழ்வுச் சிக்கல் மற்றும் அந்நிய உணர்வு முதலானவையும் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் பரவலாகப் பேசப்பட்டன. “திரைகடல் ஓடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கணும் அவலம் கரியவர் அயலர் எனவசை கேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய்”8 “கற்றுக்கொள் கறுப்பு நாயே சாகப் பிறந்த பன்றியே தொழுவத்தை விட்டு ஏன் வந்தாய் வெளியே? கறுப்பர் […]







