\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

நிறம் தீட்டுங்கள் – வண்ண மயில்

நிறம் தீட்டுங்கள் – வண்ண மயில்

Continue Reading »

எழுதுங்கள் வெல்லுங்கள்

Filed in பலதும் பத்தும் by on January 16, 2014 1 Comment
எழுதுங்கள் வெல்லுங்கள்

மேற்காணும் இரண்டு படங்களையும் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது? உங்களின் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். மனதில் தோன்றுவதை கவிதை வடிவில் எழுதி சமர்ப்பிக்கவும். எல்லாப் போட்டிகளுக்கும் உள்ளது போல சில விதி முறைகள் கீழே; படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்குக் கடைசி திகதி: 02/15/14. உங்களது படைப்பு இதற்கு முன் இணையத்திலோ பத்திரிகையிலோ வெளியாகி இருக்கக் கூடாது. கவிதை வடிவமாக இருத்தல் அவசியம் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைகூ என்று எந்த வடிவத்தில் இருப்பினும் சரியே. இருபது வரிகளுக்கு […]

Continue Reading »

எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments
எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்

மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்

பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்

Continue Reading »

கனவுக் கன்னி

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments
கனவுக் கன்னி

கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்

Continue Reading »

தானியங்கி ஊர்தி (Self Driving Car)

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
தானியங்கி ஊர்தி (Self Driving Car)

நாம் நாளை உலகம், விஞ்ஞான விந்தை என்று திரைப்படம் பார்த்துச் சொக்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் 21வது நூற்றாண்டு எந்திரங்கள்  சிறிது சிறிதாக எம்மருகில் அண்மித்து, ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்று கூறுவது மிகையாகாது. கீழே இது பற்றிய விவரணை. இதமான காலை வெய்யில் கிழக்கில், முகில்கள் அதிகமற்ற பிரகாசமான நீலவானம் வழக்கம் போல சிவம் வேலைத்தளம் செல்ல ஆயுத்தமாகிறான்.  அழகான பச்சைப்பசேலெனவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் சிறிய முன்முற்றத்தைத் தாண்டி தரித்திருக்கும் தனது ஊர்தியினுள் வலதுப்பக்கத்தின் சாரதிப் பகுதியில் ஏறிக்கொள்கிறான். […]

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

(பகுதி 2) புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் உள்ளடக்கம் கவிதையின் உள்ளடக்கம் என்பது, அது எதைப்பற்றிச் சொல்ல முனைகிறது என்பதைப் பொறுத்ததாகும். கொளு, கரு, பாடுபொருள், உள்ளீடு, பொருள், விஷயம், தீம், பாவிகம் போன்ற பல பெயர்களினால் இதனை அழைப்பர். ‘’எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருளின் செய்தி உள்ளடக்கம்’’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இவ்வகையில், ஒரு கவிஞன் கூறவிழையும் பொருள் பொதுமையானது. அது சமூகத்துக்குரியது. வருணனை மட்டுமே கவிஞனுக்கு உடைமையானது. கவிதையின் பொருள் வேறு, கவிதை […]

Continue Reading »

இலகுவான மீன் குழம்பு

Filed in அன்றாடம், சமையல் by on January 15, 2014 0 Comments
இலகுவான மீன் குழம்பு

மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி பின்னர் மஞ்சள், பாதி கறி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து ஒருபக்கத்தில் வைத்துக்கொள்ளவும். பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.

ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் சற்று மிளகு, வெந்தயம்,கடுகு,சீரகம் போன்றவற்றைப் பாதி கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் சேர்த்துக்கிளறி, மீன் துண்டுகளை அதன் மேலை வைக்கவும். 30 நாழிகளில் மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி விடவும். மேலும் 30 நாழிகளில் இதர பொருட்களை எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி இருப்பது முக்கியம்.

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2

Filed in இலக்கியம், கதை by on January 15, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் […]

Continue Reading »

ஸ்ரீனிவாச ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன்

உலகளாவிய அளவில் இந்திய நாட்டின் அடையாளமாக இருப்பதும் , இந்தியர்கள் கணிதத்தில் மேம்பட்டவர்கள் என்னும் கருத்தை நிலை நிறுத்துவதும் ஸ்ரீனிவாச ராமானுஜன் என்ற ஒற்றை மனிதர். டிசம்பர் 22 1887 அன்று பிறந்த ராமானுஜனின் 125வது பிறந்த தினத்தை இந்தியா மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுள்ள கணிதத்துறையைச் சார்ந்த அனைவரும் போற்றி க் கொண்டாடினர். சென்ற ஆண்டை “நாட்டின் கணித வருடம்” என்றும் டிசம்பர் 22ம் தேதியை “நாட்டின் கணித நாள்” என்றும் அறிவித்தது இந்திய அரசாங்கம். ஈரோட்டில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad